/tamil-ie/media/media_files/uploads/2022/02/Fahad.jpg)
காஷ்மீரில் ‘தி காஷ்மீர் வல்லா’ எனும் ஆன்லைன் செய்தி தளத்தின் ஆசிரியர் ஃபகத் ஷா, மற்றொரு செய்தியாளர் சஜத் குல் ஆகியோரை போலீஸார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
கைது நடவடிக்கைக்கு செய்தி ஆசிரியர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கைது செய்யப்பட்ட இரண்டு செய்தியாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் செய்தியாளர்கள் துன்புறுத்தப்படுவதை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் நிறுத்த வேண்டும்.
பயங்கரவாத நடவடிக்கைகளை பெருமைப்படுத்துதல், போலிச் செய்திகளைப் பரப்புதல் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு நிலைமையை உருவாக்குவதற்காக பொதுமக்களைத் தூண்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் செய்தியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் காஷ்மீரில் ஊடக சுதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.