/tamil-ie/media/media_files/uploads/2022/09/Rahul-and-Gehlot.jpg)
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்றால் அசோக் கெலாட் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பச்சை கொடுகாட்டியுள்ளார். ராகுல்காந்தி போட்டியிடவில்லை என்றால் தான் போட்டியிடப்போவதாக அவர் முடிவில் இருப்பதாக கருதப்படுகிறது. நேற்று மாலை நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல் .ஏ சந்திப்பில், காங்கிரஸ் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை பின்பற்றும் ஒரு விஸ்வாசம் கொண்ட மனிதனாக தான் இருப்பேன் என்று கெலாட் கூறியுள்ளார். அவர் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்கபோவதாகவும், தொடர்ந்து கேரளா சென்று ராகுலிடம் காங். தலைவராக போட்டியிட கடைசியாக ஒருமுறை பேசிப் பார்க்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் காங். எம் எல் ஏக்களை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் செய்ய டெல்லிக்கு அழைத்துள்ளார் கெலாட். செப்டம்பர் 26ம் தேதி கெலாட் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் தலைவர் தேர்தலில் போட்டியிடகேரள மாநிலத்தை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசி உள்ளார். அப்போது அவர் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்த தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.