Advertisment

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் வெளியீடு - 19 லட்சம் பேர் நீக்கம்

NRC list : வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை வெளியேற்றும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New NRC

assam nrc, assam nrc list, assam nrc list 2019, assam nrc final list, assam nrc final list 2019, assam nrc online, assam nrc list online, www.assam.gov.in, www.assam.gov.in nrc, assam.gov.in, assam mygov in, www.assam.mygov.in, www.assam.gov.in, assam.mygov.in, www.nrcassam.nic.in, nrc assam online check, nrc assam online list, nrc assam first draft list, assam nrc first draft list, assam nrc list, அசாம் குடிமக்கள் பதிவேடு, அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, வங்கதேசம், போலீஸ், பாதுகாப்பு

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3,30,27,661 பேர் இந்த பட்டியலில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில், 3,11,21,004 மட்டுமே, இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 19 லட்சம் பேர் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும்பரபரப்பு நிலவிவருகிறது.

Advertisment

அசாம் மாநிலத்தில், அண்டை நாடான, வங்கதேசத்தை சேர்ந்த பலர், சட்டவிரோதமாக வசிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை வெளியேற்றும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.

இதன்படி, அசாமை சேர்ந்தவர்கள், தகுந்த சான்றிதழ்களை கொடுத்து, தங்கள் பெயர்களை பதிவு செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலையில், வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 41 லட்சத்துக்கும் அதிகமானோர் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதனால், அசாமில், பதற்றமும், பரபரப்பும் நிலவியது.இதையடுத்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக, மறு பதிவு செய்யும் நடைமுறை தொடர்ந்து வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 31ம் தேதி) இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக என்ஆர்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜீலா கூறுகையில், இறுதி பட்டியலில் 3,11,21,004 பேர் இடம்பெற்றுள்ளனர். 19,06,657 பேர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்கள், பட்டியலில் உரிய ஆவணங்கள் வழங்கவில்லை. இந்த பட்டியலில் திருப்தி இல்லாதவர்கள், வெளிநாட்டினவருக்கான தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்றார். பட்டியல் வெளியீடு காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Assam Bangladesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment