/tamil-ie/media/media_files/uploads/2023/08/Manipur.jpg)
அஸ்ஸாம் ரைபிள்ஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது மெய்தி சமூகப் பெண்கள் சாலை மறியல் செய்தனர்
ஆகஸ்ட் 6 ஆம் தேதி குவாக்டா நகரத்தை உலுக்கிய வன்முறையின் போது பிஷ்ணுபூர் காவல்துறை அதிகாரிகளை தடுத்ததாக குற்றம் சாட்டி, அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் மீது மணிப்பூர் காவல்துறை தானாக முன்வந்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள ஃபூகாக்சாவ் காவல் நிலைய பொறுப்பதிகாரி இந்த முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார்.
அதாவது, அரசு ஊழியர் பணியை செய்ய விடாமல் தடுத்தல், பொது ஊழியரை காயப்படுத்துவதாக மிரட்டல், குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி அதிகாலையில், குவாக்டாவில் மெய்டே சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர், அதன் பிறகு மைடே ஆதிக்கம் செலுத்தும் பிஷ்னுபூர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள நகரத்திற்கு அருகில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த கொலைகள் குக்கி பயங்கரவாதிகள் நடத்தியதாக போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் மெய்தி ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அஸ்ஸாம் ரைபிள்ஸ்க்கு எதிராகவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தப் படையை இங்கிருந்து நீக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.