கல்வி, ஆன்மீகம், நிர்வாகத் துறைகளில் ஆரோவில் - புதுச்சேரி பல்கலை. இணைந்து புதிய ஒப்பந்தம்

குஜராத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவியின் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் முழுமையான கல்வி, நிலையான வாழ்க்கை மற்றும் உலகளாவிய தொடர்புக்கான பாதையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவியின் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் முழுமையான கல்வி, நிலையான வாழ்க்கை மற்றும் உலகளாவிய தொடர்புக்கான பாதையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Auroville

புதுச்சேரி பல்கலைக்கழகம், ஆரோவில் இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ளைடு டெக்னாலஜிக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த தனது ஒத்துழைப்பை, விரிவான கல்விப் பரிமாற்றமாக மாற்ற முன்வந்துள்ளது.

புதுச்சேரி, ஆரோவில்லில், கல்வி, ஆன்மீகம் நிர்வாகத் துறைகளில் ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளனர். குஜராத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர், ஆரோவில் அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர் ஜெயந்தி எஸ். ரவியின் இந்த ஒப்பந்தம் இந்தியாவின் முழுமையான கல்வி, நிலையான வாழ்க்கை மற்றும் உலகளாவிய தொடர்புக்கான பாதையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத் தலைவர்கள் ஒன்றுகூடல்

Advertisment

இந்த சந்திப்பில், ஆரோவில் அறக்கட்டளை, புதுச்சேரி ஆசிரமம், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் பிரகாஷ் பாபு  அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தின்  ஆரோவில்லின் கல்வி நிறுவனங்களை புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைப்பது மட்டுமல்ல, முழுமையான ஒரு கல்விப் பரிமாற்றத்தை உருவாக்குவதும் ஆகும். பிரதமர் மோடியின் "வசுதைவ குடும்பகம்" (உலகமே ஒரு குடும்பம்) என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, ஆன்மீக ஞானத்தையும், நடைமுறை புதுமையையும் ஒருங்கிணைப்பதே இதன் நோக்கம்.

புதுச்சேரி பல்கலைக்கழகம், ஆரோவில் இன்ஸ்டிடியூட் ஆஃப் அப்ளைடு டெக்னாலஜிக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த தனது ஒத்துழைப்பை, விரிவான கல்விப் பரிமாற்றமாக மாற்ற முன்வந்துள்ளது. 

Advertisment
Advertisements

பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பிரகாஷ் பாபு, தங்கள் நிறுவனத்தின் 40 வருட அனுபவத்தையும், 10,000 மாணவர்களையும் கொண்டு, மாணவர், ஆசிரியர் மற்றும் வசதிப் பரிமாற்றங்களை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

இந்த ஒத்துழைப்பு செப்டம்பர் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயன்படுத்தப்படாத சொத்துக்களை முழுமையாகப் பயன்படுத்தி, நிலையான சமூக வளர்ச்சிக்கான மாதிரியை உருவாக்குதல். 

ஆன்மீக சுற்றுலாப் புரட்சி: தினசரி வருகை தரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளுக்கு, அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் ஆழமான ஆன்மீக அனுபவத்தை வழங்குதல். செப்டம்பர் 15-ம் தேதி இந்த புதிய திட்டம் தொடங்கப்படும். ஆரோவில் குழந்தைகள் வெளி உலகத்தையும், வெளி உலகக் குழந்தைகள் ஆரோவில்லையும் அனுபவிக்கும் வகையில் ஒரு புதிய கல்விப் பரிமாற்ற திட்டத்தை உருவாக்குதல்.

உலகளாவிய வலைப்பின்னல்: இந்தியா முழுவதும் மற்றும் உலகளவில் தகவல் மையங்களை அமைத்து, ஆரோவில்லின் கொள்கைகளை உலகெங்கும் பரப்புதல்.

இந்த சந்திப்பிற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகத்திலிருந்து, அதிகாரி மணிகண்டன், முழுமையான ஆதரவை வழங்கினார். புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு அரசுகளிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளையும் திரட்ட முடியும் என்று அவர் உறுதியளித்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், செப்டம்பர் மாதத்தில் ஆரோவில்லுக்கு வருகை தரவுள்ளார். 

இந்த வருகை, ஆரோவில், புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி அரசு ஆகிய மூன்று தரப்புகளுக்குமான ஒரு ஒத்துழைப்பைத் தொடங்கி வைக்க வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் 2047 தொலைநோக்குத் திட்டத்திற்கு ஒரு புதிய பாதையை அமைக்கும் என்று கருதப்படுகிறது.

ஆரோவில்லின் எல்லைகளைக் கடந்து, இந்தியா ஒரு முழுமையான கல்வி, நிலையான வாழ்க்கை மற்றும் ஆன்மீக ஞானத்தில் உலகத் தலைவராக உருவெடுப்பதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. இந்த ஒத்துழைப்பு, வரும் காலங்களில் கல்வி, நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: