Advertisment

நகரமாக மாறிய அயோத்தி, அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை; ஒரு வருடத்திற்கு பிறகு எப்படி இருக்கிறது ராமர் கோவில்?

அயோத்தியில் நடந்து வரும் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க திட்டம்; கும்பமேளாவையொட்டி அதிக பக்தர்களை எதிர்ப்பார்க்கும் ராமர் கோவில்; ஒரு வருடத்திற்கு பிறகு அயோத்தி எப்படி இருக்கிறது என்பது இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ayodhya devotee

ராம ஜென்ம பூமியின் முதலாம் ஆண்டு விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக, அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மற்றும் ஹனுமான் காரி கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் கூடுகிறார்கள். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்/விஷால் ஸ்ரீவஸ்தவ்)

Maulshree Seth

Advertisment

ராமர் கோயிலுக்கான பிரமாண்ட கும்பாபிஷேக விழா முடிந்து ஒரு வருடம் கழித்து, அயோத்தி நகரமாக மாறியுள்ளது. ஏறக்குறைய 80,000 மக்கள்தொகை கொண்ட நகராட்சி, ஒவ்வொரு நாளும் பல பார்வையாளர்களைப் பெறும் ஒரு பெரிய புனித யாத்திரை தலமாக மாறி வருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க: Ayodhya a year later: A city, its officials trying to keep pace with pilgrim numbers

கோவிலின் கட்டுமானம் இந்த பெரிய அடிவாரத்திற்கு இடமளிக்க வேண்டியிருந்தது, அதன் நிறைவுக்கான புதிய காலக்கெடு இப்போது மார்ச் 30, 2025 ஆகும்.

Advertisment
Advertisement

நகரைச் சுற்றி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன, மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன, போக்குவரத்துக் காவலர்கள் சிரமப்படுகின்றனர், உள்ளூர் ஹல்வாய்க்குப் பதிலாக பல்வேறு மாநிலங்களின் மெனுக்களைக் கொண்ட புதிய ஹோட்டல்கள் உருவாகியுள்ளன, ராமர் கோயிலில் நிறுவப்பட்ட சிலையின் பிரதிகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சாலையோர தாபாக்களின் மெனுவிலும் மாற்றம் தெரிகிறது, தென்னிந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பூரி-சப்ஜிக்கு பதிலாக இட்லி-சாம்பார் விற்பனை செய்யப்படுகிறது.

அதிகாரிகள் நாள் ஒன்றுக்கு 80,000 முதல் 2.5 லட்சம் வரை பக்தர்கள் வருவதாக கூறும் நிலையில், ராமர் கோயில் திட்டத்தால் இடம்பெயர்ந்த உள்ளூர்வாசிகளின் கோபம் பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க.,வின் அதிர்ச்சி தோல்விக்கு பங்களித்ததாக நம்பப்படுகிறது, கட்டுமானத்தின் வேகம் தேர்தல் முடிந்ததையடுத்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அயோத்தியில் நிரம்பி வழியும் ராமர் கோயில் சிலைகளின் பிரதிகள் பக்தர்களிடையே பிரபலமாக உள்ளன.

ராம் பாத் அருகே ஒரு பாதையில் வாடகை விடுதியில் இருந்து “மிட்டாய் கடை” நடத்தும் ராம் பிரகாஷ், போக்குவரத்து மற்றும் பார்க்கிங் தொடர்பான தனது தொடர்ச்சியான போராட்டத்தைப் பற்றி பேசுகிறார்.

அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி கூறுகையில், "அனைத்து முக்கிய குடிமைப் பணிகளும் முடிந்துவிட்டது, கோவிலுக்குச் செல்லும் முக்கியப் பாதைகளின் பணிகள் முடிந்துவிட்டன... நடைபெற்று வரும் பணிகளும் விரைவில் முடிவடையும்."

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கட்டுமானக் குழுவின் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா, அயோத்தியில் மூன்று நாட்கள் கோயிலின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். இதற்குப் பிறகு, மிஸ்ரா கூறுகையில், மார்ச் 30, 2025 அன்று, பிரதான கோவில் பணிகள் முடியும், ஜூலை 2025 இல் கோயிலின் 1.1 கிமீ நீளமான “பெர்கோட்டா (சுற்றளவு)” கட்டுமான பணிகள் முடியும் என்று கூறினார்.

பக்தர்களின் கூட்டத்தை மனதில் வைத்து பணிகள் செய்ய வேண்டும் என்று மிஸ்ரா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். தற்போது, பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பத்தில் இருந்து பல யாத்ரீகர்கள் அயோத்திக்கு வருவதால், எண்ணிக்கை ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. ஜனவரி 29-ம் தேதி வரும் மௌனி அமாவாசை நாளில், அயோத்தியில் பக்தர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

"மிகவும் சிறப்பு வாய்ந்த வேலைகளில் சிக்கல்கள் உள்ளன, ஆனால் ஒட்டுமொத்த கட்டுமானம் சீராக நடக்கிறது. பக்தர்களின் பாதுகாப்பே முதன்மையானது, அதில் சமரசம் செய்யாமல் சிறந்த பலன்களை அடைய முயற்சிக்கிறோம்” என்கிறார் மிஸ்ரா.

முதல் தளத்தில் உள்ள 'ராம் தர்பார்' உட்பட பிரதான கோவிலை முடித்த பிறகு - அங்கு நிறுவப்படும் வெள்ளை பளிங்கு சிலைகள் ஜெய்ப்பூரில் செதுக்கப்படுகின்றன - அவர்களின் அடுத்த இலக்கு பெர்கோட்டாவாக இருக்கும் என்று மிஸ்ரா கூறுகிறார்.

மேலும் வளாகத்தில் வரும் முனிவர்கள் மற்றும் துறவிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஏழு கோவில்கள், "அந்த சகாப்தத்தின் சமூக நல்லிணக்கத்தின் சின்னங்கள்" என்று மிஸ்ரா கூறுகிறார்.

தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு, கட்டுமானத்தின் சலசலப்பு கவனத்தை சிதறடிக்கவில்லை. ஹனுமான் கர்ஹி கோவிலுக்கு வெளியே வரிசையில் நிற்கும் பிரியா குமாரி, பீகாரில் உள்ள வைஷாலியில் இருந்து வந்த 15 பேர் கொண்ட குழுவுடன் வந்து இருப்பதாக கூறுகிறார். "முதலில் கும்பமேளாவில் நீராடிவிட்டு நேற்று அயோத்திக்கு வந்து சேர்ந்தோம்... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்போம், ஆனால் தரிசனம் செய்யாமல் போகமாட்டோம்," என்று பிரியா குமாரி கூறினார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியால் 2023 டிசம்பரில் அயோத்தியில் திறக்கப்பட்ட மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையமும் வளர்ச்சியில் உள்ளது. முதல் கட்டமாக 2,200 மீட்டர் ஓடுபாதை அமைக்கப்பட்ட நிலையில், 3,750 மீட்டராக மேம்படுத்த இன்னும் ஓராண்டு ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது முடிந்ததும், லக்னோ விமான நிலையத்தின் ஓடுபாதையின் அளவை விட இது அதிகமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வளர்ச்சியைப் பொறுத்து விரைவில் சர்வதேச விமானங்களைத் தொடங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது, தோராயமாக ஒரு நாளைக்கு 4,000 பேர் பயணிக்கின்றனர், தினமும் சுமார் 10-12 விமானங்கள் இயக்கப்படுகின்றன, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், மும்பை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து வரும் விமானங்களில் கிட்டத்தட்ட 90% இடங்கள் நிரம்பி உள்ளன. ஆரம்பத்தில், தினமும் 17 முதல் 18 விமானங்கள் இயக்கப்பட்டன, ஆனால் சிக்கலில் உள்ள ஸ்பைஸ்ஜெட் தனது விமானங்களை தினசரி எட்டுலிருந்து மூன்றாகக் குறைத்ததால் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதிகாரிகள் இப்போது அயோத்தியில் தங்கியிருக்கும் யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறார்கள், இதன் மூலம் அயோத்தியின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துகிறார்கள். கடந்த ஓராண்டில் சுமார் 60 புதிய ஹோட்டல்கள் செயல்பட அனுமதி பெற்றதாகக் கூறப்பட்டாலும், சில இன்னும் பணியைத் தொடங்கவில்லை, மற்ற தாஜ் குழுமம் போன்றவை கட்டுமானத்தில் உள்ளன.
அயோத்தி மேயர் கூறுகையில், பல நட்சத்திர ஹோட்டல்கள் வந்தாலும், "நியாயமான" கட்டணத்தில் தங்குமிடங்களைக் கட்டுவதில் அவர்கள் இப்போது கவனம் செலுத்துகின்றனர்.

உதாரணமாக, மௌனி அமாவாசை அவசரத்திற்காக, 10,000 பேர் வரை தங்கக்கூடிய ஒரு தற்காலிக கூடார நகரத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அயோத்தியில் ஒரு ஹோட்டலை வைத்திருக்கும் சௌரப் கபூர், ராமர் கோயில் அருகே மற்றொரு ஹோட்டலைக் கட்டத் தொடங்குகிறார்: “கடந்த ஆண்டு மிகவும் போட்டியாக இருந்தது, ஆனால் அது ஆரோக்கியமானது. புதிய ஹோட்டல்கள் வந்தாலும் தேவை அதிகரித்துள்ளது. நீண்ட வார இறுதி நாட்கள், சிறப்பு சந்தர்ப்பங்களில் எங்களுக்கு கூட்டம் அதிகம் வரும். ஜனவரி 26 (குடியரசு தினம், ஞாயிற்றுக்கிழமை அன்று) எங்கள் ஹோட்டலின் முன்பதிவு முடிந்துவிட்டது, மௌனி அமாவாசை அன்று பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கிறோம்,” என்கிறார் கபூர்.

அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, நிலுவையில் உள்ள சில முக்கிய பணிகள் “பஞ்ச் கோசி” மற்றும் “பாண்ட்ரா கோசி பரிக்ரம மார்க்” ஆகும். ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய 84 கோசி பரிக்ரமா மார்க்கத்தின் பணியும் நடைபெற்று வருகிறது.

முடிக்கப்பட்ட பணிகளில், 40 மெகாவாட் திறன் கொண்ட என்.டி.பி.சி சோலார் ஆலை மற்றும் ஆறு ரயில்வே மேம்பாலங்கள் உள்ளதாக ஆணையம் கூறுகிறது.

Ayodhya Temple Ram Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment