அயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு!

சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் கோரியிருந்தன.

சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் கோரியிருந்தன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு!

அயோத்தி வழக்கு வரும் ஜனவரி மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு தொடர்பான விசாரணை இன்று (29.10.18) உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இந்நிலையில் வழக்கை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அயோத்தி வழக்கு:

Advertisment

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத்  உயர்நீதிமன்றம்,  கடந்த 2010 ஆம் ஆண்டு  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீடு செய்தனர். மேலும் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் கோரியிருந்தன.

ஆனால், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத்தேவையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொழுகை நடத்துவதற்கு மசூதி அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுவதை சுட்டிக்காட்டி கடந்த 1994ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை மேற்கோள் காட்டி இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

மேலும் இந்த வழக்கை விரைவான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான 3 நீதிபதிகளின் புதிய அமர்வு ஒன்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில்  இன்று இந்த  மனுமீதான விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இது குறித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன் மூலம், ஜனவரி மாதமே அயோத்தியா தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு குறைவு தான் என்று கூறப்படுகிறது.

Ayodhya Temple Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: