Advertisment

அயோத்தி வழக்கு : மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம்!

சமரச பேச்சுவார்த்தையை அரைகுறையாக முடிக்க விருப்பமில்லை என கருத்து.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ayodhya case

Ayodhya case

Ayodhya case : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கில் அறிக்கை தர மத்தியஸ்தம் குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்தி. இங்குள்ள ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கில் சமரசம் ஏற்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் அடங்கிய சமரச குழுவை அமைத்தது.

இந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி கலிஃபுல்லா , வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மற்றும் தமிழக உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.மேலும் இந்தக் குழு 8 வாரக் காலத்தில் அயோத்தி தொடர்பாக இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், சமரச பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை நேரடியாக உச்ச நீதிமன்றத்திடமே தெரிவிக்க வேண்டும். ஊடகங்களுக்கோ அல்லது வெளியிலோ தகவலை கசியவிடக்கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி இந்த மூவர் குழு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது. அதில், சமரச பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இவர்களின் கோரிக்கை மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று காலை தொடங்கியது. அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி , மத்தியஸ்தம் குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க ஆகஸ்ட் 15 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், சமரச பேச்சுவார்த்தையை அரைகுறையாக முடிக்க விருப்பமில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Ayodhya Temple Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment