Advertisment

அயோத்தி கோயில், ரயில் நிலையத்தில் தண்ணீர் கசிவு: கட்டுமான குறைபாடு காரணமா?

புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்திற்கு வெளியேயும் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது கனரக இயந்திரங்களை பயன்படுத்தி பள்ளங்களை நிரப்பி தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
ayodhya ram temple

Ayodhya

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அயோத்தியின் ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, கோவிலில் நீர்க்கசிவு மற்றும் அதற்கு செல்லும் சாலையில் உள்ள பள்ளங்கள் ஏற்பட்டதால் கோவில் அறக்கட்டளை மற்றும் அயோத்தி நிர்வாகமும் தங்களின் முதல் சவாலை எதிர்கொள்கிறது.

Advertisment

செவ்வாய்க்கிழமை முதல் பருவமழையின் முதல் கனமழையை நகரம் கண்டு வருகிறது. மழையினால் கோவிலின் கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தில் தண்ணீர் சொட்ட வழிவகுத்தது, மேலும் ராமர் பாதை மற்றும் பிற பகுதிகளில் தண்ணீர் தேங்கி, குழிகளை ஏற்படுத்தியது.

புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்திற்கு வெளியேயும் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது கனரக இயந்திரங்களை பயன்படுத்தி பள்ளங்களை நிரப்பி தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிகாலை கோயிலுக்குச் சென்றபோது, கன்ட்யூட் பைப்ஸ், கருவறைக்கு அருகில் கட்டப்பட்டு வரும் இரண்டு படிக்கட்டுகள் மற்றும் ‘கூத் மண்டபத்தின்’ தற்காலிக மேற்கூரை ஆகியவற்றிலிருந்து மழைநீர் சொட்டிக்கொண்டிருந்தது.

மண்டபத்திற்கு செல்லும் வழியில் தண்ணீர் குட்டைகள் இருந்ததால், பளிங்கு தரை சேறும் சகதியுமாக வழுக்குகிறது.  

கோயிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ், கோயிலுக்குள் வடிகால் அமைப்பு இல்லை என்றும், கருவறையில் கசிவுகள் இருப்பதாகவும் கூறினார். இருப்பினும், கோவிலின் மேல்மட்டப் பணிகள் நடந்து வருவதால், அங்கு மண்டபம் மற்றும் குவிமாடம் அமைக்கப்பட்டு வருவதால், நீர் சொட்டுவதாக கோயில் அதிகாரிகள் கூறுகின்றனர். 

வடிவமைப்பு மற்றும் கட்டுமான மேலாளர் கிரிஷ் சஹஸ்ரபோஜனீ கூறுகையில், சமீபகாலமாக எல்லா இடங்களிலும் கசிவு ஏற்பட்டுள்ளது, 80 சதவீதம் நிறைவடைந்த கட்டமைப்பில் இருந்து 100 சதவீத பலனை எதிர்பார்க்க முடியாது என்பதுதான் எளிய உண்மை. கட்டுமான கட்டத்தில், சில சிறிய சிக்கல்கள் உள்ளன, ஆனால் அடிப்படை வடிவமைப்பு முறைகளில் எந்த தவறும் இல்லை, என்றார். 

கோயில் அறக்கட்டளை அதிகாரிகளும் வடிகால் பற்றாக்குறை குறித்த தாஸின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர், மேலும் ஒருவர் புனித நீர் சாக்கடையில் கலக்காமல் இருப்பதை உறுதிசெய்வது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவு, என்று விளக்கினார்.

அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், கசிவு பற்றிய குற்றச்சாட்டுகளை மறுத்தார். 

முதல் தளத்தில் எலெக்ட்ரிகல் வயரிங், வாட்டர் ப்ரூஃபிங் மற்றும் ஃப்ளோர்ரிங் பணிகள் நடந்து வருவதால், ஜங்ஷன் பாக்ஸ்களில் இருந்து தண்ணீர் புகுந்தது… மேலே இருந்து தண்ணீர் கசிவது போல் இருந்தது, ஆனால் அது உண்மையில் கன்ட்யூட் குழாய்களில் இருந்து வருகிறது. மழைநீரை வெளியேற்ற கோவிலில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எனவே எங்கும் தண்ணீர் தேங்காது,  என்று அவர் கூறினார்.

புதன் கிழமையன்று ‘கூத் மண்டபம்’ அருகே, பாதுகாப்புப் பணியாளர்கள் மழைநீரைச் சேகரிக்க வைக்கப்பட்டிருந்த சிவப்பு வாளியின் அருகே நின்றிருந்தனர். 

சஹஸ்ரபோஜனீயின் கூற்றுப்படி, 'கூத் மண்டபம்' 50 அடிக்கு மேல் உயரத்தில் குவிமாடத்துடன் இருக்க வேண்டும். தற்போது 20 அடியில் ஒரே மாடி மட்டுமே உள்ளது. மேல்மட்டத்தில் பணிகள் நடந்து வருவதால், திறந்த நிலையில் உள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அதை தற்காலிகமாக மூடி பாதுகாக்க முயற்சித்தோம். 

பார்வையாளர்களை மேல் இரண்டு தளங்களுக்கு அழைத்துச் செல்ல கருவறைக்கு வடக்கேயும், தெற்கிலும், இரண்டு படிக்கட்டுகள் வேண்டும். இங்கு வேலை நடந்து கொண்டிருப்பதால், மேலே தற்காலிக கூரையுடன் படிக்கட்டு திறக்கப்பட்டுள்ளது. அது முடிந்ததும், இந்த இடத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது, என்றார். 

கோவிலுக்கு செல்லும் அரை கிலோமீட்டர் சாலையான ராம ஜென்மபூமி பாதையில் தண்ணீர் தேங்கியதால் பக்தர்களும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நகரின் சதத்கஞ்சிலிருந்து நயா காட் வரை இணைக்கும் 13 கிமீ நீளமுள்ள சாலையும் மூன்று இடங்களில் குழி விழுந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்த சாலை அமைக்கப்பட்டது. 

முன்னுரிமை அடிப்படையில் சாலை சீரமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன, என்று அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் நிதீஷ் குமார் கூறினார். 

அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், நாங்கள் ஸ்பாட் வெரிஃபிகேஷன் செய்து வெவ்வேறு குழுக்களை அமைத்துள்ளோம்; 28 இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ளதால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. புதிய கட்டுமானத்துக்குப் பிறகு பெய்த முதல் மழை இது என்பதால், அனைத்துப் பிரச்னைகளையும் உடனடியாகத் தீர்த்து வருகிறோம், என்றார். 

240 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன் திறக்கப்பட்ட புதிய அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதையெல்லாம் வெளியேற்றுவது கடினம், என்று ஒரு தொழிலாளி கூறினார். 

எந்தவொரு திட்டத்திற்கும் ஒரு வருடம் குறைபாடு பொறுப்புக் காலமாக வழங்கப்படுகிறது. இவை சிறிய பிரச்சினைகள் மற்றும் விரைவில் தீர்க்கப்படும். கூரையில் இருந்து தண்ணீர் சொட்டுவதில்லை, அது மூடப்படாத வாயில்களில் இருந்து உள்ளே நுழைகிறது, இந்த சிக்கல்கள் தீர்க்கப்படும், என்று பெயர் வெளியிட விரும்பாத ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

Read in English: Behind water ‘leakage’ at Ayodhya temple and station: Work in progress

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ayodhya Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment