/indian-express-tamil/media/media_files/gSr6x8IzPwHBpz50YDcq.jpg)
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா; ஜனவரி 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, ஜனவரி 22ஆம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் அரை நாள் விடுமுறை என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Ayodhya Ram temple event: Half-day leave declared for all central govt offices on Jan 22
“அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டா 2024 ஜனவரி 22 அன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். பணியாளர்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு 22 ஜனவரி 2024 அன்று 14.30 மணி நேரம் வரை அரை நாள் விடுமுறை அளிக்க என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று பணியாளர் மற்றும் பயிற்சி (DoPT) துறை வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கான "அதிகமான உணர்வு மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு" பதிலளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.
"அயோத்தியில் பிரான் பிரதிஷ்டா விழாவை ஒட்டி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள அமைப்புகள் மற்றும் மக்கள் குழுக்களால் பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன" என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. “முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான விரிவான ஏற்பாடுகளை தூர்தர்ஷன் செய்துள்ளது, இது பல தனியார் தொலைக்காட்சி சேனல்களிலும் நேரடியாகக் காண்பிக்கப்படும். அயோத்தி விழாவை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பொது இடங்களில் பெரிய திரைகளில் நேரடியாக திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்று அந்த வட்டாரம் மேலும் கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.