Advertisment

நெல்லூரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து; செயல்திறனை அறிய ஐசிஎம்ஆர்-க்கு அனுப்பிய ஆந்திர அரசு

Andhra Pradesh to send Nellore ayurveda practitioner’s ‘Covid drug’ to ICMR for efficacy test: கொரோனாவுக்கு ஒரு அதிசய சிகிச்சை என்று வதந்தி பரப்பப்படும் ஆயுர்வேத மருந்தின் செயல்திறனைப் பற்றிய விரிவான ஆய்வுக்காக ஐ.சி.எம்.ஆர்- க்கு அனுப்ப ஆந்திர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
நெல்லூரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து; செயல்திறனை அறிய ஐசிஎம்ஆர்-க்கு அனுப்பிய ஆந்திர அரசு

கொரோனாவை குணப்படுத்துவதாக, கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்தை, நெல்லூர் மாவட்டம் துறைமுக நகரமான கிருஷ்ணபட்டினத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் வழங்கி வந்த நிலையில், அந்த மருந்து குறித்து ஆய்வு செய்ய, ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, வெள்ளிக்கிழமை அன்று உத்தரவிட்டார்.

Advertisment

ஆயுர்வேத மருந்து வழங்கப்பட்டு வரும் சட்டமன்றத் தொகுதியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ., கே.கோவர்தன் ரெட்டி, இந்த ஆயுர்வேத மருந்தை தீவிரமாக ஊக்குவித்து, கொரோனாவுக்கு இது ஒரு “அதிசய சிகிச்சை” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

"இந்த ஆயுர்வேத மருந்தை உட்கொண்ட பல கொரோனா நோயாளிகள் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுள்ளனர், மேலும் குணப்படுத்தப்பட்டனர். போனிகி ஆனந்தையா ஒரு புகழ்பெற்ற ஆயுர்வேத பயிற்சியாளர் ஆவார், மேலும் அவர் கொரோனாவை குணப்படுத்த ஐந்து மருத்துவ சேர்க்கைகளைக் கண்டறிந்துள்ளார். அவரது மருந்து வேலை செய்கிறது… அதனால்தான் கிருஷ்ணாபட்டினத்தில் அவரது வீட்டிற்கு வெளியே நிறைய பேர் காத்திருக்கிறார்கள், ”என்றார் கோவர்தன் ரெட்டி.

கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றமால் வெளியில் நிற்கும் பெரிய கூட்டத்தைப் பற்றி கேட்டபோது, ​​ பாதுகாப்புப் பணியாளர்கள் மக்கள் சமூக இடைவெளியை பராமரிப்பதை உறுதிசெய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள் என்றார். எவ்வாறாயினும், பல சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் சுகாதார செயலாளர் பி.வி.ரமேஷ் உட்பட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், பெரிய கூட்டங்களை "கொரோனா பேரழிவுக்கான வழி" என்று சிவப்புக் கொடியிட்டதால், ஆந்திர அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

"எங்கள் எம்.எல்.ஏ கே.கோவர்தன் ரெட்டி மருத்துவ வல்லுநர்கள் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்கும் வரை, அதிசய சிகிச்சை என்று அழைக்கப்படும் இந்த ஆயுர்வேத சிகிச்சை குறித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும், இது குறித்து முதல்வர் கோபமும் வருத்தமும் அடைந்துள்ளார், ”என்று ஒரு அதிகாரி கூறினார்.

“கொரோனாவுக்கு ஒரு அதிசய சிகிச்சை என்று வதந்தி பரப்பப்படும் ஆயுர்வேத மருந்தின் செயல்திறனைப் பற்றிய விரிவான ஆய்வுக்காக ஐ.சி.எம்.ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) க்கு அனுப்ப ஆந்திர அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆயுர்வேத மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ வல்லுநர்கள் குழுவை நெல்லூருக்கு அனுப்பவும் அரசு முடிவு செய்துள்ளது. ’’ என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில், கொரோனாவுக்கான அதிசய சிகிச்சை என அழைக்கப்படும் கிருஷ்ணாபட்டிணம் மருந்து அல்லது கிருஷ்ணாபட்டிணம் டானிக் என வைரலாகி வருவதால், ஆனந்தயாவின் வீட்டிற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர்.

ஒரு பெரிய கூட்டம் குறித்து எச்சரிக்கை அடைந்து, சமூக ஊடகங்களால் எச்சரிக்கப்பட்ட நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் ஆயுஷ் கிரண் ரிஜிஜு மற்றும் ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பால்ராம் பார்கவா ஆகியோரிடம் மருந்து குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஒரு ஆந்திர குழுவுடன் விசாரணையை நடத்த ஐசிஎம்ஆர் குழு ஏற்கனவே நெல்லூரை அடைந்துள்ளது. நெல்லூர் மாவட்ட எஸ்.பி., காவல்துறையினரின் ஒரு குழுவை வார இறுதியில் கூட்டம் திரண்டால் கட்டுப்படுத்த அனுப்பியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Ayurveda Corona Treatment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment