Advertisment

ஹைதராபாத் பல்கலை.யில் பி.பி.சி- மோடி ஆவணப் படம்; ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவு புகார்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நரேந்திர மோடி தொடர்பான ஆவணப் படம் திரையிடப்பட்ட நிலையில், இது தொடர்பாக பாஜக மாணவர் அமைப்பு புகார் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
BBC documentary on PM Modi screened at Hyderabad University campus

பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசி ஆவணப் படம் ஹைதராபாத் பல்கலைகழக வளாகத்தில் திரையிடப்பட்டது.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உள்ள வளாகத்தில் சனிக்கிழமை (ஜன.21) சர்ச்சைக்குரிய பிபிசியின் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான ஆவணப் படம் திரையிடப்பட்டது எனப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் புகார் அளித்துள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி தொடர்பான பிபிசியின் சர்ச்சைக்குரிய ஆவணப் படம் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.

Advertisment

இந்த நிலையில் ஏபிவிபி அளித்துள்ள புகாரில், “இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்புவதற்கு சமீபத்தில் இந்திய அரசு தடை விதித்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், ஏபிவிபி இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை. இது குறித்து ABVP மத்திய செயற்குழு உறுப்பினரும், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் மாணவருமான பி ஷ்ரவன் ராஜ், “இந்தப் பிரச்சினையில் நாங்கள் இதுவரை காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை.

மேலும் எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. பல்கலைக்கழக நிர்வாகத்தை மட்டுமே அணுகியுள்ளோம். ஆனால், ஹைதராபாத் பல்கலைக்கழக நிர்வாகம் இதில் அமைதி காக்கிறது” எனத் தெரிவித்தார்.

பிபிசி ஆவணப்படத்தின் 'திரையிடல் மற்றும் விவாதம்' தொடர்பாக "சகோதர இயக்கம், ஹைதராபாத் பல்கலைக்கழகம்" ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்தத் திரையிடல் நிகழ்வில் சுமார் 70 முதல் 80 மாணவர்கள் ஆவணப்படத்தைப் பார்த்துள்ளனர்.

இது தொடர்பாக, ஹைதராபாத் பல்கலைக்கழக (UoH) மாணவர் சங்கத் தலைவரும், SFI இன் உறுப்பினருமான அபிஷேக் நந்தன், “மத்திய பாஜக அரசாங்கத்தின் முகவராக ஏபிவிபி நடந்து கொள்வதை நிறுத்த வேண்டும் என்றார்.

மேலும், “ஆவணப்படத்தை திரையிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், நாங்கள் அவர்களுடன் நிற்போம். இது தடை செய்யப்பட்ட எந்த அமைப்பாலும் எடுக்கப்பட்ட படம் அல்ல.

பிபிசி உலகளாவிய வலையமைப்பைக் கொண்ட ஊடக அமைப்பு. இது அரசாலோ அல்லது நீதிமன்றத்தினாலோ தடை செய்யப்படவில்லை. பல்கலைக்கழக வளாகங்களில் விவாதம் மற்றும் விவாத கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் ”என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Hyderabad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment