Advertisment

மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு முன் இருக்கும் சவால்கள்: முதலில் கணக்கெடுப்பு, பின்னர் எல்லை நிர்ணயம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025-ம் ஆண்டு நடைபெறும். 2024-ல் வீடுகள் பட்டியல் எடுக்கப்பட்டு அதைத் தொடர்ந்து கணக்கெடுப்பு நடைபெறும். இதன் முடிவுகள் வெளியிட 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும்.

author-image
WebDesk
New Update
Women.jpg

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று (செப்.19) முதல் அலுவல் பணிகள் தொடங்கின. 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற அமர்வின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

Advertisment

இது நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில்  பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டைக் கொண்டுவருவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை அறிமுகப்படுத்தியதில் பெரிய அரசியல் அறிக்கை தெளிவாகத் தெரிகிறது. எவ்வாறாயினும், 181 பெண்கள்  நாடாளுமன்த்திற்குள் நுழைவதற்கு, இந்த நடவடிக்கை பல சட்டவளையங்களைக் கடந்து செல்ல வேண்டும்.

முதலாவதாக, அரசியலமைப்பு சட்டம் (128-வது திருத்தம்) மசோதா 2023, பெண்கள் இடஒதுக்கீட்டை சர்ச்சைக்குரிய எல்லை நிர்ணய செயல்முறையுடன் இணைக்கிறது. இந்த மசோதா தொடங்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை  கணக்கெடுப்புக்கான தொடர்புடைய புள்ளிவிவரங்களுக்குப் பிறகு, பெண்களுக்கான இடஒதுக்கீடு "இந்த நோக்கத்திற்காக எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும்..." என்று அது கூறுகிறது.

அரசியலமைப்பின் 82 வது பிரிவு ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளின் தொகுதிகளை (எண் மற்றும் எல்லைகள்) மறுசீரமைக்க வழி வகுக்கிறது.

2000-க்குப் பிறகு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் வரை 42வது திருத்தம் இந்த எல்லை நிர்ணய நடவடிக்கையை முடக்கியது. 2001 இல், இது மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. எனவே இப்போது, ​​2026க்குப் பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளில் எல்லை நிர்ணயம் நடக்கும்.

https://indianexpress.com/article/political-pulse/womens-quota-delimitation-exercise-census-figures-8946787/

சாதாரண போக்கில், 2031 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரே எல்லை நிர்ணயம் நடக்கும் என்று அர்த்தம். ஆனால், 2021ல் நடக்கவிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு - ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் நடத்தப்படும்  கணக்கெடுப்பு தாமதமாகி வருவதால், கோவிட் தொற்றுநோய் காரணமாக, இந்த காலவரிசை மாற்றப்படலாம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025-ம் ஆண்டு நடைபெறும். 2024-ல் வீடுகள் பட்டியல் எடுக்கப்பட்டு அதைத் தொடர்ந்து  கணக்கெடுப்பு நடைபெறும்.  இதன் முடிவுகள் வெளியிட 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும்.  ‘2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு’ முடிவுகள் 2026க்குப் பிறகு வெளியிடப்பட்டால், இதுவே தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தின் அடிப்படையாக மாறும்.

"மக்கள்தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து எல்லை நிர்ணய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இதற்கு அரசியலமைப்பில் கூடுதல் திருத்தங்கள் தேவை. சட்டப் பேரவைகளின் அமைப்பு தொடர்பான சட்டப்பிரிவு 82 மற்றும் 170 (3) திருத்தப்பட வேண்டும்" என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் சட்ட ஆலோசகர் எஸ்.கே மெந்திரட்டா கூறினார்.

தற்போதைய நிலவரப்படி, மக்களவையில் இடங்கள் மறுஒதுக்கீடு மற்றும் மாநில சட்டசபைகளில் இடங்களை மறுசீரமைத்தல் ஆகியவை "2026 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும் போது" செய்யப்படுகின்றன. மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இந்த காலக்கெடுவை (2026) மாற்ற வேண்டும் என்று மெந்திரட்டா கூறினார்.

எல்லை நிர்ணய நடவடிக்கைக்கு மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து தேவை. அரசியலமைப்பின் 368(2) வது பிரிவு, நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் எந்த மாற்றமும் அந்த அவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சிறப்புப் பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் வாக்களிக்க வேண்டும் இது மாநிலங்களில் குறைந்தது பாதி என்ற கணக்காகும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment