/indian-express-tamil/media/media_files/2025/06/10/h7nCRsFafSkjm2Q4iLmW.jpg)
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (Raja Raghuvanshi) மற்றும் சோனம் ரகுவன்ஷி (Sonam Raghuvanshi) தம்பதி மேகலயாவில் மேற்கொண்ட ஹனிமூன் பயணம், ஒரு பயங்கரமான கொலையில் முடிவடைந்தது. இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருமணமான சில நாட்களிலேயே ராஜாவை கொல்ல ராஜ்குஷ்வாஹா (Raj Kushwaha) திட்டமிட்டதாக மத்திய பிரதேச காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
மேலும், இந்த கொலை சம்பவத்தில், ராஜா ரகுவன்ஷியின் புது மனைவி சோனம் ரகுவன்ஷியும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம், ராஜா மற்றும் சோனம் மேகாலயாவில் காணாமல் போனதாகத் தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு சோனத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனிடையே ராஜாவின் கொலையை ராஜ்குஷ்வாஹா திட்டமிட்டு செய்ததாகவும், அதற்கு சோனம் உடந்தையாக இருந்ததாகவும் காவல்துறையினர் சந்தேகிப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில், சோனம் உத்தரபிரதேசத்தில் சரணடைந்ததை தொடர்ந்து, ராஜ்குஷ்வாஹா இந்தூரில் கைது செய்யப்பட்டார். இது குறித்து குற்றப்பிரிவு அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, சோனம் மற்றும் ராஜாவின் ஹனிமூன் பயணத்தின் போது, சோனம் பகிர்ந்து கொண்ட இருப்பிட தகவல்களைப் பயன்படுத்தி, ராஜாவைக் கொல்ல நியமிக்கப்பட்டவர்கள் தம்பதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர். இதில், இந்தூரிலேயே தங்கியிருந்த ராஜ்குஷ்வாஹா, மேகாலயா அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் சோனத்தின் குடும்பத்தினருடன் அவர் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ராஜாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு இந்தூருக்கு கொண்டு வரப்பட்ட பிறகு, ராஜ்குஷ்வாஹா, சோனத்தின் தந்தை தேவி சிங்குடன் (Devi Singh) துக்கத்துடன் இறுதிச் சடங்குகளில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ஒரு மூத்த குற்றப்பிரிவு அதிகாரி கூறுகையில், "குற்றவாளிகள் ராஜாவை தொலைதூர இடத்தில் கொன்று, அவரது சடலத்தை யாரும் எளிதில் அணுக முடியாத இடத்தில் வீச திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ராஜ்குஷ்வாஹா இந்தூரிலேயே தங்கி தான் வெளியூரில் இருப்பதாக அனைவரும் நம்ப வேண்டும் என்று விரும்பியுள்ளார். கொலைக்கு முன்னதாக ராஜ்குஷ்வாஹா மற்றும் சோனம் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்தது சந்தேகங்களை எழுப்பியது."
ராஜ்குஷ்வாஹா, சோனத்தின் குடும்பத்திற்கு சொந்தமான ப்ளைவுட் உற்பத்தி பிரிவின் பில்லிங் துறையில் பணிபுரிந்துள்ளார். சோனம் கல்லூரி படிப்பை முடித்த பிறகு எச்.ஆர் துறையில் பணிபுரிந்துள்ளார். அவர்கள் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து நெருக்கமானார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சோனத்தின் குடும்பத்திற்கு அருகில் வசித்து வந்த ராஜ்குஷ்வாஹா, சமீபத்தில் நந்த்பாக் பகுதிக்கு குடிபெயர்ந்தார். அதே இடத்தில், கொலையை உண்மையில் செய்ததாக சந்தேகிக்கப்படும் மற்ற குற்றவாளிகள் வசித்து வந்தனர்.
இதில், விஷால் சவுகான் (Vishal Chauhan), ஆகாஷ் ராஜ்புத் (Akash Rajput) மற்றும் ஆனந்த் குர்மி (Anand Kurmi) ஆகிய மூன்று பேர் ராஜ்குஷ்வாஹாவால் கூலிக்கு அமர்த்தப்பட்டதாக குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மூவரும் ரயிலில் கவுகாத்திக்கு சென்று அங்கிருந்து மேகாலயாவுக்கு சென்றுள்ளனர். ஒரு உள்ளூர் வழிகாட்டி ராஜாவின் பின்னால் சோனம் மற்றும் மூன்று குற்றவாளிகளை கொலை நடந்த இடத்திற்கு அருகில் பார்த்ததாக போலீசாரிடம் கூறியது இந்த வழக்கில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
கொலை செய்ய பயன்படுத்திய அந்த ஆயுதமும், அந்தப் பகுதிக்கு சொந்தமில்லாததால் சந்தேகங்களை எழுப்பியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த ஆயுதத்தை கவுகாத்தியில் வாங்கியிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். கூடுதல் டிசிபி (குற்றம்) ராஜேஷ் தந்தோடியா (Rajesh Dandotiya), மேகாலயா போலீஸ் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு தடுத்து வைத்த தனது குழுக்கள், "குற்றவாளிகள் பீஹாருக்கு பயணம் செய்து அங்கிருந்து கவுகாத்திக்கு சென்று, பின்னர் அங்கிருந்து மேகாலயாவில் உள்ள குற்ற இடத்திற்கு சென்றனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர்கள், தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர், மற்றும் ஷில்லாங் போலீஸ் ஏழு நாட்கள் விசாரணை நடத்த அனுமதி பெற்றுள்ளனர். நான்காவது குற்றவாளி, ஆனந்த், சாகர் மாவட்டத்தில் உள்ள பினாவிலிருந்து இந்தூருக்கு கொண்டு வரப்படுகிறார்."
ராஜாவின் சகோதரர், விபின் ரகுவன்ஷி (Vipin Raghuvanshi), "ராஜ்குஷ்வாஹா சோனமின் பணியாளர். அவர்கள் தொடர்ந்து தொலைபேசியில் பேசுவார்கள். நான் ராஜ்குஷ்வாஹாவை ஒருபோதும் பார்த்ததில்லை; நான் அவரது பெயரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் (ராஜா மற்றும் சோனம்) அஸ்ஸாமில் உள்ள மா காமாக்யா கோயிலில் வழிபாடு செய்ய மட்டுமே செல்லவிருந்தனர். அதன்பிறகு, அவர்கள் ஷில்லாங்கிற்கு செல்வதாகக் கூறினர். இருவரில் யார் மேகாலயாவுக்குச் செல்ல திட்டமிட்டனர் என்று எங்களுக்குத் தெரியாது. அவர்கள் திரும்பி வரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
ராஜாவின் தாய், உமா (Uma), சோனம் ஹனிமூனை திட்டமிட்டதாகவும், டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல்களை முன்பதிவு செய்ய ராஜாவிடமிருந்து ரூ 9 லட்சம் எடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். மேலும், குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக ராஜாவுடன் விலைமதிப்பற்ற நகைகளை எடுத்துச் செல்ல சோனம் ராஜாவை சம்மதிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார். கொலையாளிகளுக்கு பணம் வழங்க சோனம் ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உட்பட இந்த கூற்றுகள் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து பேசிய உமா, திருமணத்திற்கு முன்பு, ராஜா சோனம் தன் மீது ஆர்வம் காட்டவில்லை என்று தனக்குச் சொன்னதாக கூறினார். "என் மகன் என்னிடம், 'அம்மா, அவள் ஆர்வம் காட்டவில்லை. நான் அவளை திருமணம் செய்ய விரும்பவில்லை' என்று சொன்னான். நான் அப்போது சோனத்திடம் என் மகன் மீது ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டேன். அவள் அலுவலக வேலையில் மும்முரமாக இருந்ததாகவும், அவனுடன் பேச நேரம் கிடைக்கவில்லை என்றும் சொன்னாள். ஆனால் அதன்பிறகு, அவள் என் மகனுடன் பேச ஆரம்பித்தாள். ஹனிமூன் திட்டங்களை சோனம் தான் செய்தாள்," என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.