Advertisment

மைசூரு கோர்ட் குண்டுவெடிப்பு வழக்கு: தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் என உறுதி

விசாரணைக்குப் பிறகு, என்.ஐ.ஏ மூன்று நபர்களுக்கு எதிராக மே 24, 2017 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை இந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி முடிவடைந்தது. ஆகஸ்டில் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Bengaluru, NIA special court convicts 3 persons of Tamil Nadu, Mysuru Court blast case, NIA, மைசூரு கோர்ட் குண்டுவெடிப்பு வழக்கு, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் குற்றாவளிகள் என உறுதி, Mysuru Court blast case judgement, karnataka, tamil nadu

மைசூரு கோர்ட் குண்டுவெடிப்பு வழக்கில் பெங்களூரு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர்கள் குற்றவாளிகள் என்று அறிவித்தது.

Advertisment

கர்நாடக மாநிலம் மைசூரு நீதிமன்ற வளாகத்தில் 2016 ஆகஸ்டில் நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை பெங்களூரு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது. குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் 3 பேருக்குமான தண்டனை திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மைசூரு நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில், நைனார் அப்பாஸ் அலி, எம் சம்சுன் கரீம் ராஜா மற்றும் தாவூத் சுலைமான் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) இது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஆகஸ்ட் 1, 2016ல் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவைச் சேர்ந்த பேஸ் மூவ்மென்ட் என்ற அமைப்பின் உறுப்பினர்கள் நடத்திய 5 தொடர் குண்டுவெடிப்புகளில் மைசூர் கோர்ட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவமும் ஒன்று. அவர்கள் மார்ச் 7, 2016ல் சித்தூர் கோர்ட்டிலும் (நெல்லூர், ஆந்திர பிரதேசம்), மே 15, 2016 அன்று கேரளத்தின் கொல்லம் கோர்ட்டிலும், செப்டம்பர் 12, 2016 அன்று ஆந்திராவின் நெல்லூர் கோர்ட்டிலும், கேரளா, நவம்பர் 1, 2016 அன்று மல்லபுரம் கோர்ட்டிலும் வெடிகுண்டு வெடிக்கச் செய்தனர்.

அப்போது, சாம்ராஜ்புரம் பகுதியில் அமைந்துள்ள மைசூரு மாவட்ட நீதிமன்றத்தின் கழிவறை அறையில் வெடிகுண்டு வெடித்தது. மைசூரு நீதிமன்ற குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு மைசூருவில் உள்ள லட்சுமிபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு பின்னர் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நைனார் அப்பாஸ் அலி, தாவூத் சுலைமான் ஆகியோர் 2015 ஜனவரியில் தமிழ்நாட்டில் அடிப்படை இயக்கத்தை உருவாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களை நியமித்து, அரசாங்கத் துறைகளை அச்சுறுத்தும் குற்றச் சதி திட்டத்துக்கு திட்டமிட்டனர். குறிப்பாக நீதிமன்றங்கள், ஒரு குறிப்பிட்ட மதக் குழுவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அநீதிகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். சதித்திட்டத்தின் பேரில், அவர்கள் சிறை அதிகாரிகளுக்கும் பல்வேறு மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கும் அச்சுறுத்தல் விடுத்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

விசாரணைக்குப் பிறகு, என்.ஐ.ஏ மூன்று நபர்களுக்கு எதிராக மே 24, 2017 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை இந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி முடிவடைந்தது. ஆகஸ்டில் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். தண்டனையை வழங்குவதில் ஒரு தாமதத்தை எதிர்பார்த்தார்கள். ஆனால், என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் அதை நிராகரித்தது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Karnataka Nia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment