சென்னை டு பெங்களூரு 2 மணி நேரத்தில் பயணம்: எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை ஆய்வு செய்த நிதின் கட்கரி

இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடம் ஜனவரியில் பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படும். அதன் விளைவாக சென்னை முதல் பெங்களூருக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடம் ஜனவரியில் பெங்களூரு சென்னை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படும். அதன் விளைவாக சென்னை முதல் பெங்களூருக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
நிதின் கட்கரி

நிதின் கட்கரி

இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடம் ஜனவரியில் பெங்களூரு சென்னை  எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படும். அதன் விளைவாக சென்னை முதல் பெங்களூருக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் நடைபெற்ற அசோக் லைலாண்ட் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் மத்திய துரை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த விழாவில் சிறப்பாக ஹைட்ரஜன் பயன்பாட்டில் இயங்கும் பியுயல் செல் பேருந்து மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஸ்விச் வகை சரக்கு வாகனங்கள் என இரண்டு புதிய வகை  வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த விழாவில் பேசிய நிதின் கட்கரி, ’இந்தியா வேகமாக வளரும் நாடு. உலகிலேயே வேகமாக வளரும் நாடு பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சில வருடங்களில் முதல் இடத்திற்கு கொண்டு வருவோம்.

Advertisment
Advertisements

இந்திய பொருளதாரத்தை 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்றால் இந்த வாகன உற்பத்தி துறை மிகவும் முக்கியம். படிம எரி பொருட்களை பயன்படுத்துவதால் காற்று மாசு அதிகமாக உள்ளது. மெத்தனால் தான் சரியான மாற்று எரிபொருள். மெத்தனால் பேந்துகள் மற்றும் லாரிகளை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என் கனவு. தமிழ்நாடு நெல் விவசாயிகள் மூலம் தயாரிக்கப்படும் மெத்தனால் ஒரு நாள் வான்வெளி போக்குவரத்துறையில் பயன்படுத்தப்படும். இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருடம் ஜனவரியில் பெங்களூரு- சென்னை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திட்டம்  செயல்படுத்தப்படும்.  அதன் மூலம் சென்னை  முதல் பெங்களூருக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும். மேலும் புதிய பசுமை நெடுஞ்சாலை திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்த பட உள்ளது. இது டெல்லி – சென்னை தூரத்தை 320 கிலோ மீட்டர் வரை குறைக்கும்’ என்று  தெரிவித்தார்.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: