ஆர்.எஸ்.எஸ் மாநாடு : சரமாரியான கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்த மோகன் பகவத்

எல்.ஜி.பி.டி அங்கத்தினரையும் ஆதரிப்பதாக கருத்து...

எல்.ஜி.பி.டி அங்கத்தினரையும் ஆதரிப்பதாக கருத்து...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆர்.எஸ்.எஸ் கருத்தரங்கம்

ஆர்.எஸ்.எஸ் கருத்தரங்கம்

ஆர்.எஸ்.எஸ் கருத்தரங்கம் : ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு ஒன்று நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் மோகன் பகவத்.

Advertisment

அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவது குறித்தும், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்தும், காஷ்மீரின் பிரச்சனைகள் குறித்தும்ம் பேசியிருக்கிறார் மோகன் பகவத்.

அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியாக அமையும் என்றும் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

இடஒதுக்கீடு, மாடுகள் கடத்தப்படுவதால் ஏற்படும் வன்முறைகள் குறித்தும் நிறைய பேசினார் மோகன் பகவத். 100% சிறந்த அரசியல்வாதிகள் என்று யாரும் இல்லை ஆனால் சிறந்த அரசியல்வாதிகளை தேர்வு செய்வது மக்களின் கையில் தான் இருக்கிறது என்று கூறினார்.

நோட்டா பற்றி பேசும் போது “நோட்டாவினை மக்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நல்ல தலைவர்களுக்குப் பதிலாக தவறான தலைவர்கள் அந்த இடத்தினை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்” உள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் கருத்தரங்கம்

இடஒதுக்கீடு பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறிய மோகன் பகவத் “இடஒதுக்கீட்டு சலுகையினை பெறுபவர்கள் அதை தானே முன் உவந்து வேண்டாம் என்று கூறும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்” என்று அவர் கூறினார்.

பிஹாரில் தேர்தல்கள் நடைபெற்ற போது ஏற்பட்ட சர்ச்சைக்குரிய பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அவரின் பதில் இருந்தது. வேற்று சமுதாயத்தை சேர்ந்த இருவர்கள் திருமணம் செய்துகொள்வதையும் எல்.ஜி.பி.டி அங்கத்தினரையும் ஆதரிப்பதாக கருத்து.

மாட்டினை கடத்துபவர்களுக்கும் லின்ச்சிங்கிற்குமான வித்தியாசத்தினை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வன்முறையில் இறங்கி மக்களை தாக்குபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மூன்று நாட்கள் நடந்த இந்த கருத்தரங்கில் பங்கேற்க 66 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது ஆர்.எஸ்.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Delhi Rss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: