New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/12/rahul-bjp.jpg)
பாரத் ஜோடோ யாத்திரையில் சுவாரஸ்யம்: இராஜஸ்தான் பா.ஜ.க அலுவலகத்தில் குழுமியிருந்தவர்களுக்கு பறக்கும் முத்தங்களை வழங்கிய ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை காலை தனது யாத்திரையை மிகவும் சுவாரசியமாக தொடங்கினார், அணிவகுப்பைப் பார்ப்பதற்காக பா.ஜ.க ஜாலவர் அலுவலகத்தின் மாடியில் கூடியிருந்த மக்களுக்கு பறக்கும் முத்தங்களை வழங்கினார்.
பா.ஜ.க கட்சியையும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தையும் குறிவைத்து, அவர்கள் ஏன் ‘ஜெய் சியராம்’ மற்றும் ‘ஹே ராம்’ என்று கோஷமிடவில்லை என்று கேட்டதற்கு ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது.
இதையும் படியுங்கள்: வாக்குப்பதிவின் போது பிரதமர் மோடி ஊர்வலம்.. காங்கிரஸ், மம்தா பானர்ஜி புகார்
திங்கட்கிழமை இரவு ராகுல் காந்தி தங்கியிருந்த கேல் சங்குலில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்கியது, யாத்திரை காலையில் ஜலவர் நகரைக் கடந்தது.
हम दिल जोड़ेंगे, संबंध जोड़ेंगे और भारत के हर एक वर्ग को जोड़कर दम लेंगे...🔥 pic.twitter.com/v05MlaRrIy
— Rajasthan Youth Congress (@Rajasthan_PYC) December 6, 2022
முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், பல அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்றனர்.
ஏறக்குறைய 12 கிலோமீட்டர் தூரத்தை கடந்து, காலை 10 மணியளவில் யாத்திரை தேவரிகாட்டாவை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
மதிய உணவுக்குப் பிறகு, யாத்திரை பிற்பகல் 3.30 மணிக்கு சுகேட்டில் இருந்து மீண்டும் தொடங்கும். ராஜஸ்தானில் உள்ள மோரு கலன் கேல் மைதானத்தில் இரவு தங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி ராஜஸ்தானில் தனது யாத்திரையை மேற்கொண்டு வரும் நிலையில், அஜய் மக்கன் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, மூத்த பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவை இராஜஸ்தான் பொறுப்பாளராக கட்சி உயர் தலைமை நியமித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.