Advertisment

பீகாரில் பிரமாண்ட சீதா கோவில்: 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு முடிவு

50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல், தற்போதுள்ள சீதா கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதியை மறுசீரமைப்பதற்காக பீகார் அரசு முன்பு கையகப்படுத்திய 16.63 ஏக்கரை விட அதிகமாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Bihar acquires 50 acres in Sitamarhi for Sita temple Tamil News

அயோத்தியில் ராமர் கோவிலை திறப்பை தொடர்ந்து, பீகாரில் 50 ஏக்கரில் அமையும் பிரமாண்ட சீதா கோவில்!

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Bihar | sita: அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்பட்ட நிலையில், சீதாவின் பிறந்த இடமாகக் கருதப்படும் வடக்கு பீகாரில் உள்ள சீதாமர்ஹி மாவட்டத்தில் சீதாவிற்கு "பிரமாண்ட கோவில்" கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கோவிலைக் கட்ட பீகார் அரசு அதன் கொள்கையளவில், சீதாமர்ஹியில் இருக்கும் கோவிலைச் சுற்றி 50 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

Advertisment

இந்த முடிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பீகார் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.“ராமருக்கு அயோத்தி எப்படிப்பட்டதோ, அதுவே சீதாவுக்கு சீதாமர்ஹி. இது இந்துக்களுக்கு புண்ணிய பூமி. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இப்போது அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு வந்து வழிபடுவார்கள். மேலும் அவர்கள் சீதையின் பிறந்த இடத்திற்கும் செல்ல விரும்புகிறார்கள். சீதாவுக்கு அவரது அந்தஸ்துக்கு ஏற்ற பிரமாண்டமான கோவில் சீதாமர்ஹியில் கட்டப்பட வேண்டும் என்பதே எங்களின் வாதம்,” என்று பீகார் முன்னாள் எம்.எல்.சி.யும், பா.ஜ.க உறுப்பினருமான காமேஷ்வர் சௌபால் கூறினார்.

“சீதாமர்ஹியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் உள்ளது. ஆனால் அது நல்ல நிலையில் இல்லை. அயோத்தியில் ராமர் கோவிலுக்கு இணையான பிரமாண்டமான புதிய கோவிலைக் கட்ட வேண்டும் என்பதே எங்கள் முடிவு,” என்று 1989 ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவிலின் ஷிலான்யாஸ் அல்லது அடிக்கல் நாட்டு விழாவின் போது முதல் செங்கல்லை வைத்த பா.ஜ.க-வின் காமேஷ்வர் சௌபால் கூறினார். இவர் அயோத்தி கோவில் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் உள்ளார்.

50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல், தற்போதுள்ள கோவில் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதியை மறுசீரமைப்பதற்காக பீகார் அரசு முன்பு கையகப்படுத்திய 16.63 ஏக்கரை விட அதிகமாக இருக்கும். ராமர் கோவிலை கட்டுவது போல், பொது பணத்தில் அறக்கட்டளை மூலம் கட்டப்படும் கோவில் கட்ட வேண்டும்.

இது தொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் எஸ் சித்தார்த் கூறுகையில், “அரசாங்கம் கோவில் கட்ட முடியாது. ஆனால் இங்கு பிரமாண்ட கோவில் கட்ட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. அதைச் சாத்தியமாக்குவதற்காக அரசாங்கம் நிலத்தை கையகப்படுத்துகிறது. 

கோவில் எழுப்பப்படும்போது, ​​இப்பகுதி ஏராளமான பக்தர்களுக்கு உணவளிக்க வேண்டும். விடுதிகள் மற்றும் பொது வசதிகள் போன்ற வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். இப்பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தியின் தேவைகளை கருத்தில் கொண்டு நிலங்களை கையகப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்டப்பட்டதைத் தொடர்ந்து இந்த இடத்தில் அதிக ஆர்வத்தை எதிர்பார்க்கிறோம். இது ஒரு திருப்பதி போன்ற தளமாக உருவாகும் ஆற்றலைக் கொண்டுள்ளது, மேலும் அந்த வகையான வளர்ச்சிக்கு போதுமான இடம் இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம், ”என்று அவர் கூறினார்.

சீதாமர்ஹி என்பது ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 15 முக்கிய இடங்களின் தொகுப்பான ராமாயண சர்க்யூட்டின் ஒரு பகுதியாகும். இது மத சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் வளர்ச்சிக்காக மத்திய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதிய கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் கோவில் கட்டும் பணி தொடங்கியதில் இருந்து இவை வலுப்பெற்றுள்ளன. பீகார் அரசு இப்பகுதியில் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.72 கோடியை அனுமதித்தது. சித்தார்த் மற்றும் பிற பீகார் அரசு அதிகாரிகளுடன் பக்தர்கள் கூட்டம் நடத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு நிலம் கையகப்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

"பீகாரில் நிதிஷ்குமார் அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு இது. அப்பகுதி மற்றும் வெளியூர் மக்களின் உணர்வுகளுக்கு மிகவும் நெருக்கமான இந்தப் பிரச்னையில் முதல்வர் தனி அக்கறை காட்டினார். அயோத்தியில் ராமர் கோவிலுக்கு இணையான கோவிலைக் கட்டுவதற்கு மாநில அரசின் முடிவு வழி வகுக்கிறது” என்று புதிய கோவிலுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள குழுவின் அங்கமான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அம்ரேந்திர சிங் கூறினார்.

"முன்மொழியப்பட்ட கோவிலின் விவரங்கள் இன்னும் உருவாக்கப்பட வேண்டும். இப்போது ஆரம்ப நாள்களில் உள்ளோம். நிலம் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பீகார் அரசு மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இப்போது எங்களைப் போன்றவர்கள், தற்போதுள்ள கோவிலை நடத்தும் அறக்கட்டளை மற்றும் பிற ஆர்வமுள்ளவர்கள் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சீதாமர்ஹியை உருவாக்கும் விருப்பத்தால் நாங்கள் உந்தப்பட்டுள்ளோம், மேலும் இந்த புதிய கோவிலை வரும் ஆண்டுகளில் ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாக மாற்ற வேண்டும்,” என்று பா.ஜ.க-வின் காமேஷ்வர் சௌபால் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Bihar sita
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment