Advertisment

நிதிஷ் குமார் தலைமையில் 31 அமைச்சர்கள் பதவியேற்பு: ஒரேயொரு பெண்ணுக்கு வாய்ப்பு

நிதிஷ் குமார் அமைச்சரவையில் 31 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Bihar Cabinet decoded

பீகார் அமைச்சரவை விரிவாக்கம்

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் 31 அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர். இந்த அமைச்சரவையில் யாதவ்-முஸ்லிம் கூட்டணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் 16 பேர் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியையும், 11 பேர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியையும் சேர்ந்தவர்கள். இருவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். ஒருவர் மதசார்பற்ற இந்துஸ்தான் அவாமி மோச்சா மற்றும் ஒருவர் சுயேச்சை ஆவார். போலீஸ் துறையை முதலமைச்சர் கவனிப்பார்.

மேலும் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த யாதவ சமூக அமைச்சரான பிஜேந்திர பிரசாத் யாதவ்வுக்கு எரிசக்தி இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்வுக்கு நான்கு இலாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவருக்கு சுகாதாரம், சாலை கட்டுமானம், நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி ஆகியவை ஒதுக்கப்பட்டுள்னன.

எனினும் கடந்த முறை ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு கல்வி இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது தற்போது ஐக்கிய ஜனதா தளத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த 6 யாதவ சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இஸ்லாமியர்கள் மூவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisment
publive-image

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரிடம் ஆசிர்வாதம் கோரும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்

மூவரும் முன்னாள் எம்.பி.யும் சீமாஞ்சலின் முஸ்லிம் முகமான முகமது தஸ்லிமுதீனின் மகனுமான ஷாநவாஸ் ஆலம்; முசாபர்பூரைச் சேர்ந்த பாஸ்மாண்டா முஸ்லிம் இஸ்ரயில் மன்சூரி மற்றும் சம்பாரன் பெல்ட்டைச் சேர்ந்த ஷமிம் அகமது ஆவார்கள்.

இந்த அமைச்சரவையில் உள்ள ஒரேயொரு பெண் அனிதா தேவி ஆவார். அதேபோல் பட்டியலினம் மற்றும் யாதவர் அல்லாத சமூகத்தினருக்கும் சமவாய்ப்பு அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பட்டியலினத்தில் இருந்து கயாவை சேர்ந்த குமார் சர்வ்ஜீத் மற்றும் சரன் தொகுதியை சேர்ந்த சுரேந்திர ராம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மகாகத்பந்தன் அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவர் தலித் மற்றும் மற்றொருவர் பிராமணராக இருந்தபோது இருந்ததைப் போலல்லாமல், இந்த முறை எஸ்சி-முஸ்லிம் கூட்டணியுடன் காங்கிரஸ் உள்ளது.

அதேபோல், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சி தனது ஒரே மந்திரி பதவியை தக்க வைத்துக் கொண்டது, கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் சிங் அமைச்சராக நீடித்தார். முன்னாள் மாநில அமைச்சரும் சோசலிஸ்ட் தலைவருமான நரேந்திர சிங்கின் மகனான ஜமுய் மாவட்டத்தில் உள்ள சகாய் பகுதியைச் சேர்ந்த சுயேட்சை எம்எல்ஏ சுமித் குமார் சிங்கும் அமைச்சர்கள் குழுவில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

India Nitish Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment