Advertisment

பீகாரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகம்; எலும்புகளை ஏற்றிச் சென்ற டிரக் டிரைவர் கொலை

மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு டிரக்கில் ஏற்றிச் செல்லப்பட்ட எலும்புகள் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர்.

author-image
WebDesk
New Update
unnamed

பீகாரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகம்; எலும்புகளை ஏற்றிச் சென்ற டிரக் டிரைவர் கொலை

மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கு டிரக்கில் ஏற்றிச் செல்லப்பட்ட எலும்புகள் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisment

பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு, மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்ட 55 வயதான டிரக் டிரைவர், அவர் உண்மையில் எலும்புகளை மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைக்கு ஏற்றிச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன் மற்றும் வியாழக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் முகமது ஜாஹிருதீன் தனது டிரக்கை கோரி பகர் கிராமத்திற்கு அருகில் நிறுத்தியபோது சில பிரச்சனைகள் ஏற்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக சரண் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

ஜாஹிருதீன் தனது உதவியாளரான குர்ஷித் அலியுடன் சேர்ந்து ஒரு மெக்கானிக்கைத் தேடத் தொடங்கியபோது, ​​​​சில கிராம மக்கள் கூடி என்ன கொண்டு செல்லப்படுகிறது என்று விசாரிக்கத் தொடங்கினர். லாரியில் இருந்து கடுமையான, துர்நாற்றம் வீசியதால், மாட்டிறைச்சி கொண்டு செல்லப்படுவதாக சந்தேகமடைந்த கிராம மக்கள், ஜாஹிருதீனுக்கு விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல் அவரைத் தாக்கத் தொடங்கினர் என்று போலீசார் தெரிவித்தனர். உடன் இருந்த குர்ஷித் அலி அங்கிருந்து தப்பி ஓடினார்.

தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த ஜாஹிருதின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹாஹிருதீன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருடைய மரணத்திற்கு உள்காயம் முக்கியக் காரணம் என்று சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த ஹாஹிருதீன் சரண் மாவட்டத்தில் உள்ள மஜ்வாலியா கிராமத்தில் வசித்து வந்தவர்.

“ஜாஹிருதீன் மருத்துவ நோக்கங்களுக்காக எலும்புகளைப் பயன்படுத்த உரிமம் பெற்ற மர்ஹவுரா தொழிற்சாலைக்கு எலும்புகளை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். இது ஒரு வழக்கமான விஷயம்” என்று சரண் காவல்துறை கண்காணிப்பாளர் கௌரவ் மங்லா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். மேலும், “நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இது தொடர்பாக கிராம மக்கள் 7 பேரை கைது செய்துள்ளோம்” என்று கூறினார்.

பீகார் மாநிலம், சரண் நகரில் மார்ச் மாதத்திற்குப் பிறகு இது இரண்டாவது கும்பல் படுகொலை சம்பவம். மார்ச் 7-ம் தேதி, மாட்டிறைச்சி விற்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சிவன் குடியிருப்பாளரான நசீம் குரேஷி (54) கொல்லப்பட்டார். குரேஷி தாக்கப்பட்ட சில மணிநேரங்களில் இறந்தார். மேலும், இந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment