/indian-express-tamil/media/media_files/bBcO3acGa4VSXsw7oVKG.jpg)
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங், தற்போதைய ராஜ்யசபா எம்.பி., சுதன்ஷு திரிவேதியுடன் உத்தரப் பிரதேசத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி (BJP) ஞாயிற்றுக்கிழமை (பிப்.11,2024) மாநிலங்களவைக்கு 14 வேட்பாளர்களை அறிவித்தது. இதற்கான தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங், தற்போதைய ராஜ்யசபா எம்.பி., சுதன்ஷு திரிவேதியுடன் உத்தரப் பிரதேசத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அதேபோல்,
அமர்பால் மௌரியா
சாதனா சிங்
சவுத்ரி தேஜ்வீர் சிங்
சங்கீதா பல்வந்த்
நவின் ஜெயின் ஆகியோரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
மேலும், பீகார் மாநிலத்தில் இருந்து தர்மஷீலா குப்தா மற்றும் பீம் சிங் ஆகியோரும், சத்தீஸ்கரில் இருந்து ராஜா தேவேந்திர பிரதாப் சிங்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
சுபாஷ் பராலா மற்றும் நாராயண கிருஷ்ணாசா பந்தகே ஆகியோர் முறையே ஹரியானா மற்றும் கர்நாடகாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
மகேந்திர பட் மற்றும் சாமிக் பட்டாச்சார்யா ஆகியோர் முறையே உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.
56 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.