Advertisment

இந்தி மாநிலங்களில் பா.ஜ.க வியூகம்: முழுக்க மோடி- தாமரை; மாநிலத் தலைவர்கள் மிஸ்ஸிங்!

பேரணிகளின் போது மாநில கட்சித் தலைவர்களை முன்னிறுத்தாத அல்லது அவர்களது பெயர்களை குறிப்பிடக் கூட தவறுவது பா.ஜ.க-வின் திட்டங்களை பிரதிபலிக்கிறது.

author-image
WebDesk
New Update
BJP Assembly elections campaign  Modi and lotus  Tamil News

மக்களவை தேர்தலுக்கு சற்று முன் வருவதால், இந்த சட்டசபை தேர்தல்கள் - மற்றும் தெலுங்கானா தேர்தல் - முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Bjp | narendra-modi | madhya-pradesh | rajasthan: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஆரம்பப் பயணங்கள் தெளிவான வடிவத்தைக் காட்டுகின்றன. பிரதமர் கூட்டத்துடனும் கட்சித் தொண்டர்களுடனும் நேரடியாகத் தொடர்புகொண்டு மாநிலத் தலைவர்களைக் காட்டிலும் பா.ஜ.கவுக்கு வாக்குகளைக் கேட்கிறார்.

Advertisment

ராஜஸ்தானின் சித்தோர்கரில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற பேரணியில், சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி தனது “தாமரை” சின்னத்தில் போட்டியிடும் என்று மோடி கூறினார். இரண்டு நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், கடந்த திங்கட்கிழமை, முன்னாள் முதல்வர்களான ராமன் சிங் மற்றும் வசுந்தரா ராஜே ஆகியோர் அந்தந்த மாநிலங்களில் மேடையில் இருந்தபோதும் பேசவில்லை. பிலாஸ்பூரில், மோடி கூட்டத்தில் உரையாற்றிய போது ராமன் சிங்கைப் பற்றி சில முறை மட்டுமே குறிப்பிட்டார். இதேபோல், மத்தியப் பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். ஆனால் பிரதமர் தனது உரையின் போது அவரது பெயரைச் சொல்லவில்லை. மேடையில் இருந்தவர்களுக்கும், கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் கூட்டாக பேசினார்.  

பேரணிகளின் போது மாநில கட்சித் தலைவர்களை முன்னிறுத்தாத அல்லது அவர்களது பெயர்களை குறிப்பிடக் கூட தவறுவது பா.ஜ.க-வின் திட்டங்களை பிரதிபலிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களில் ஒலிக்கும் “மாமா சிவராஜ் (தாய் மாமா சிவராஜ்)” பாடல்கள் கூட “எம்.பி கே தில் மே மோடி, மோடி கே தில் மே எம்.பி ( மத்தியப் பிரதேச மக்கள் இதயத்தில் மோடி இருக்கிறார்; மோடி இதயத்தில் மத்தியப் பிரதேச மக்கள் இருக்கிறார்  என்று வழிவகுத்தது. )” என்ற பாடலுக்கு வழிவிடும் சூழல் நிலவியுள்ளது. 

பிலாஸ்பூர், போபால் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் திறந்த வாகனத்தில் பிரதமர் பேரணி நடைபெறும் இடத்தினுள் நுழைந்தார். அதாவது தனது வருகையை ரோட்ஷோக்களாக மாற்றினார். அது உடனடியாக அங்கு குவிந்திருந்த கூட்டத்துடன் நேரடித் தொடர்பை உருவாக்கியது. மற்ற தலைவர்கள் ஏற்கனவே மேடையில் இருந்தனர், மோடியுடன் ஒரு தலைவர் மட்டுமே இருந்தார். "எனது வாகனம் உங்களைக் கடந்து செல்லும்போது, ​​சில வயதான முகங்களைப் பார்க்கிறேன், அவர்களை நோக்கி கை அசைக்கிறேன், உங்கள் ஆற்றலையும் உணர முடியும்" என்று பிலாஸ்பூரில் உள்ள கூட்டத்தில் மோடி கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க:  All about Modi, all about lotus — reading the optics of PM’s campaign in Hindi heartland

அவர் முன்னிலையில் பேசிய ஒரே மாநிலத் தலைவரை விட பிரதமர் பேசிய நேரம் தான் அதிகமாக இருந்தது. பிலாஸ்பூரில், ராமன் சிங் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த நிலையில், மோடிக்கு முன்பாக பேசியவர் மாநிலத் தலைவரும் உள்ளூர் எம்.பி-யுமான அருண் சாவோ ஆவார். 

மோடியும் கட்சித் தொண்டர்களை நேரடியாகப் பேரணிகளில் ஈடுபடுத்தினார். மூன்றாவது நபரில் தன்னைப் பற்றி பலமுறை பேசினார். அவர் பார்வையாளர்களை நோக்கி கேள்விகளை எறிந்து, கூட்டத்தின் பல்வேறு பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, இவற்றுக்கு பதிலளிக்கும்படி அவர்களை வலியுறுத்தினார். கூட்டம் கூட்டமாக பிரதமருக்குப் பதிலளிக்கும் விதத்தில் இந்த உத்தி பொதுவாக வேலை செய்கிறது.

பிலாஸ்பூரில், கட்சியின் தாமரை சின்னம் மட்டுமே தங்களின் தலைவர் மற்றும் வேட்பாளர் என்று கூட்டத்தில் மோடி கூறினார். இதனால் இந்த கேள்விகள் கட்சியின் முடிவுக்கு உட்பட்டது என்றும், தொண்டர்கள் அவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்றும் பரிந்துரைத்தார். வெளியே சென்று பா.ஜ.க-வுக்கு ஆதரவைத் திரட்டுங்கள் என்று அறிவுறுத்திய அவர், கூட்டத்தின் ஒரு பிரிவினரை நோக்கி, “ஆப் ஜாயேங்கே (இதைச் செய்வீர்களா)?” என்று கேட்டார். ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் "ஹான் (ஆம்)" என்ற சப்தங்கள் கேட்டது.

இதைத் தொடர்ந்து, மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களை நோக்கி மோடி, “ஆப் ஜாயேங்கே (இதைச் செய்வீர்களா)?” என்று கேட்டார். அனைவரும் கைகளை உயர்த்தி, “ஆம்” என்றனர். பின்னர் பிரதமர் கூட்டத்தை நோக்கி திரும்பி, “அவர்களும் தயாராக இருக்கிறார்கள்” என்றார். இந்த சைகை தலைமையை மேடையில் அமர்த்தியது மற்றும் கூட்டத்தில் இருந்த கட்சி தொண்டர்கள் கட்சி சின்னத்துக்காக வேலை செய்பவர்கள் என கிடைமட்ட உறவில் உள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கு சற்று முன் வருவதால், இந்த சட்டசபை தேர்தல்கள் - மற்றும் தெலுங்கானா தேர்தல் - முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், பா.ஜ.க காங்கிரசுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. இந்த தேர்தலில் ஒரு மாநில தலைவரை முன்னிறுத்துவதை விட, கூட்டணி மூலம் மத்திய பிரதேசத்தில் மத்திய அமைச்சர்களை நிறுத்துவது போன்ற திட்டங்களுடன் உள்ளது. 

ராஜஸ்தானில் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கரில் பூபேஷ் பாகேல் போன்ற ஒரு தலைவரை காங்கிரசுக்குக் கொண்டிருந்தாலும், கட்சித் தொண்டர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தலைவராக பா.ஜ.க பிரதமர் மோடியைக் காட்டி வருகிறது. இதற்கிடையில், மாநிலத் தலைவர்கள், குறிப்பிட்ட திட்டமில்லாமல் செயல்பாட்டில் பங்கேற்பாளர்களாகக் காட்டப்படுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Narendra Modi Rajasthan Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment