Advertisment

காங்கிரசுக்கு தாவும் 2 பா.ஜ.க அமைச்சர்கள்? இரு தரப்பு பேச்சு… கர்நாடக அரசியலில் பரபரப்பு

பா.ஜ.க தலைவர் ஒருவர், அரைமனதாக மறுத்தாலும், வி.சோமண்ணா, நாராயண கவுடா கட்சியில் இருந்து வெளியேறக்கூடும் என்று ஒரு குறிப்பு அளித்தார். இந்த வாய்ப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.

author-image
WebDesk
New Update
BJP, Congress, Express Premium, Karnataka, காங்கிரசுக்கு தாவும் இரண்டு பா.ஜ.க அமைச்சர்கள், சோமண்ணா, நாராயண கவுடா, கர்நாடகஅரசியலில் பரபரப்பு, Political Pulse, BJP ministers Somanna and Narayana Gowda join Congress, abuzz in Karnataka politics

கர்நாடகத்தில் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் சேர இரண்டு பா.ஜ.க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அவர்களைத் தடுக்க பா.ஜ.க முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இரு அமைச்சர்களும் பிற கட்சிகளில் இருந்து பா.ஜ.க-வுக்கு வந்தவர்கள். வீட்டுவசதித்துறை அமைச்சர் வி.சோமண்ணா 2008-ல் பா.ஜ.க-வில் சேர்ந்தார். இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சர் கே.சி. நாராயண கவுடா 2019-ல் பா.ஜ.க-வில் சேர்ந்தார்.

2018 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க பெரும்பான்மை பெறத் தவறிவிட்டது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனால், அவர்களின் 17 எம்.எல்.ஏ-க்கள் பின்னர் ராஜினாமா செய்வதற்கும், 2019-ல் ஆட்சியில் இரண்டு கட்சிகளையும் மாற்ற பா.ஜ.க உதவியது.

சோமண்ணா தனது மகன் அருண் சோமன்னாவுக்காக சீட்டு கேட்டு வருகிறார். அவர் சீனியராக இருந்தாலும், உரிய மரியாதை வழங்கப்படாததால் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. சாமராஜநகரில் இருந்து தொடங்கிய பா.ஜ.க விஜய் சங்கல்ப் ரத யாத்திரையை ஒருங்கிணைக்க முன்னாள் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவின் பிரதிநிதியாக மாவட்டப் பொறுப்பாளர் சோமண்ணா இருந்தது அமைச்சருக்குப் பிடிக்கவில்லை.

மறுபுறம், நாராயண கவுடா, பா.ஜ.க-வில் தனக்கான வாய்ப்புகள் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும், தன்னை காங்கிரஸ் அணுகியதாகவும் சமீபத்தில் கூறினார்.

பா.ஜ.க தனது நாடாளுமன்றக் குழு உறுப்பினர் பி.எஸ். எடியூரப்பாவை மற்ற மூத்த தலைவர்களுடன் அமைச்சர்களை சுற்றி வர நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸிடம் இருந்து கடும் சவாலை எதிர்கொண்டு, ஊழல் குற்றச்சாட்டுகளால் பின்தங்கியிருக்கும் கட்சிக்கு யார் விலகினாலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த வார தொடக்கத்தில், விவசாய அமைச்சர் பி.சி.பாட்டீல் தான், 2019-ல் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியில் இருந்து ராஜினாமா செய்த 17 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் காங்கிரஸில் சேரக்கூடும் என்று வதந்தி பரவி வருகிறது. சோமண்ணா கடந்த காலங்களில் பல கட்சிகளுடன் இருந்துள்ளார். நாராயண கவுடா வெளியேறக்கூடும் என்று செய்தி வருகிறது. ஆனால், யாரும் வெளியேறவில்லை” என்று அவர் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

இது கவுடாவிடம் இருந்து கோபமான கண்டனத்தைப் பெறது. அவர் பாட்டீலை தனது விவகாரங்களில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டார். “நான் பி.சி பாட்டீலிடம் அவருடைய வேலையைப் பார்க்கச் சொல்ல விரும்புகிறேன். என்னைப் பற்றி பேச அவருக்கு எந்த உரிமையும் இல்லை” என்று நாராயண கவுடா செவ்வாய்க்கிழமை கூறினார். அவர் பாஜகவிலிருந்து விலகுவதாக பரவும் வதந்திகளை நிராகரித்தார்.

தான் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்ட சோமன்னா, “எல்லாவற்றையும் தன்னால் வெளிப்படுத்த முடியாது” என்றும், பா.ஜ.க-வில் இருந்து விலகப் போவதில்லை என்றும் கூறினார்.

அமைச்சர்கள் தெளிவுபடுத்திய பிறகு, இந்த விவகாரத்தில் நான் எதுவும் கூறுவதற்கில்லை என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல் புதன்கிழமை தெரிவித்தார்.

இருவரையும் சமாதானப்படுத்தும் பா.ஜ.க-வின் பணியை எளிதாக்குவது என்னவென்றால், காங்கிரஸே தனது அணிகளில் அமைதியின்மைக்கு பயந்து அவர்களைத் தூண்டுவது குறித்து முடிவெடுக்கவில்லை. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்களை யாரும் அணுகவில்லை என்றும், சோமன்னா மற்றும் கவுடா இருவரும் பா.ஜ.க-வில் இருப்பதாகவும் கூறினார். “இவை வெறும் வதந்திகள் மற்றும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை” என்று அவர் கூறினார்.

மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பெட் தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் கவுடாவை கட்சியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக (இரண்டு முறை மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ மற்றும் ஒரு முறை பா.ஜ.க எம்.எல்.ஏ) - காங்கிரஸில் சேருகிறாரா என்பது குறித்து காங்கிரஸ் மாண்டியா மாவட்டத் தலைவர் சி.டி. கங்காதரிடம் அவர்கள் விளக்கம் கேட்டனர். ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் கங்காதரின் கார் மீது முட்டைகளை வீசினர்.

நாராயண கவுடா காங்கிரஸில் இணைந்தால் உருவாகும் எதிர்வினையைப் பற்றி அறிய, அவரது ஆதரவாளர்கள் அந்த தொகுதியில் புதன்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தியதாகத் தெரிகிறது.

இதேபோல், சோமண்ணாவின் வருகைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எம்.கிருஷ்ணப்பா முகாமில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அவரது மகன் பிரியகிஷ்ணா 2018-ல் பா.ஜ.க தலைவரிடம் தோற்றார். சோமன்னா மற்றும் கிருஷ்ணப்பா இருவரும் தங்கள் மகன்களின் ஆசைகளை மனதில் வைத்து நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளனர்.

தற்செயலாக, வருகிற தேர்தலில் பா.ஜ.க 5-7 சிட்டிங் எம்.எல்.ஏக்களை மட்டுமே கைவிடுவதாக செவ்வாய்க்கிழமை எடியூரப்பா அறிவித்தார். இது 20% எம்.எல்.ஏ.க்கள் கைவிடப்பட்டது என்ற பேச்சில் இருந்து ஒரு மாற்றமாகும். மேலும், குஜராத் மாடலில் முழுவதும் புதிய முகங்கள் என்று வந்தால்; கோபம் கொண்ட எம்.எல்.ஏ.க்கள் வேறு பக்கம் தாவி விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக இது கூறப்பட்டதாக நம்பப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Karnataka Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment