ஜம்மு காஷ்மீர் பாஜக மாநில செயலாளர் அனில் பரிஹார் மற்றும்அவரது சகோதரர் அஜித் பரிஹார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் கிஷத்வார் பகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் அனில் பரிஹாரும் அவரது சகோதரர் அஜித் பரிஹாரும் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
பாஜக மாநில செயலாளர் அனில் பரிஹார் சுட்டுக்கொலை
நேற்று இரவு அனில் பரிஹாரும் அவரது சகோதரர் அஜித் பரிஹாரும் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில், அவர்களது வீட்டின் அருகே மறைந்திருந்த நபர்கள் திடீரென இருவரையும் சுட்டுக் கொலை செய்தனர்.
வீட்டின் அருகே இருந்த பாதுகாவலர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் உயிரிழந்ததாக கூறினர். இதனையடுத்து கிஷ்த்வரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேட தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தீவிரவாதிகளின் தாக்குதலா அல்லது வேறு ஏதாவது குற்றச்சம்பவமா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக பொதுச் செயலாளர் அசோக் கௌல் இந்த தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.