Advertisment

அசைவ உணவு விளம்பரங்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் காரசார கேள்வி

இந்த பொதுநல மனுவில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் சட்டமன்றத்தின் எல்லைக்குள் வரும் என்றும், தடை விதிக்கும் சட்டத்தையோ அல்லது விதிகளையோ நீதிமன்றம் உருவாக்க முடியாது என்றும் மும்பை உயர் நீதிமன்ற அமர்வு கூறியது.

author-image
WebDesk
New Update
jain trust pil seeking ban non veg ads, non veg ads ban, அசைவ உணவு விளம்பரங்களுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி; மும்பை உயர் நீதிமன்றம், nonveg advertisements, PIL on noveg ads bombay, bombay hc case today, nonveg ad ban mumbai, indian express, indian express news, Tamil indian express mumbai live updates

அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் அசைவ உணவு விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் அல்லது தடை விதிக்கக் கோரி ஜெயின் அறக்கட்டளைகள் தாக்கல் செய்த பொதுநல மனுவை மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. நீங்கள் ஏன் மற்றவர்களின் உரிமைகளை அபகரிக்க முயற்சி செய்கிறீர்கள் என்று மனுதாரர்களிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

Advertisment

கடந்தகாலத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டு மனுவைத் திரும்பப் பெற மனுதாரர்கள் கோரியதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி திபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி மாதவ் ஜம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு, நல்ல விவரங்களுடன் புதிய மனுவைத் தாக்கல் செய்ய அனுமதித்து தற்போதைய பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மனுதாரர்களில் ஸ்ரீ ஆத்ம கமல் லப்திசுரிஷ்வர்ஜி ஜெயின் ஞானநந்திர் அறக்கட்டளை, ஷேத் மோதிஷா மதம் மற்றும் அறக்கட்டளை, ஸ்ரீ வர்தமான் பரிவார் மற்றும் மும்பை தொழிலதிபர் ஜோதிந்திர ராம்னிக்லால் ஷா ஆகியோர் இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதுபோன்ற பதவி விளம்பரங்கள் அமைதியாக வாழ்வதற்கான உரிமை மற்றும் தனியுரிமைக்கான உரிமையை மீறுவதாகக் கூறி, அவர்கள் பொதுநல மனு தாக்கல் செய்தனர். குழந்தைகள் உட்பட தங்கள் குடும்பத்தினர் இதுபோன்ற விளம்பரங்களைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், இந்த விளம்பரங்கள் இந்த குழந்தைகளின் மனதை பாதிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

மாநில அரசு மற்றும் மாநில அரசின் உணவுத்துறை, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய பிரஸ் கவுன்சில், இந்திய விளம்பரத் தர நிர்ணயக் கவுன்சில் மற்றும் தனியார் இறைச்சி நிறுவனங்கள் உட்பட, எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அசைவ உணவு விளம்பரங்கள் சைவ உணவுகளை நம்பும் மக்களுக்கு இடையூறு விளைவிப்பது மட்டுமின்றி, அவர்களின் தனியுரிமைக்கான உரிமையையும் மீறுவதால், ஊடகங்கள் முழுவதும் அசைவ உணவுகளின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தவும் தடை செய்யவும் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

உயிரினங்கள் மீது இரக்கம் காட்டுவதை அரசியலமைப்பின் பிரிவு 51ஏ (ஜி) அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகக் கூறுகிறது. இந்த விளம்பரங்கள் உயிரினங்களுக்கு எதிரான கொடுமையை ஊக்குவிக்கின்றன. மேலும், மதுபானத்தை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், சிகரெட் விளம்பரத்தில் அரசு சில கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசைவ உணவுகள் ஆரோக்கியமானவை அல்ல, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு, இளைஞர்களை அவற்றை உட்கொள்ள தூண்டுகிறது என்றும் மனுவில் கூறினர்.

அசைவ உணவுகளை விற்பதற்கும், உட்கொள்வதையும் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால், இதுபோன்ற பொருட்களின் விளம்பரத்திற்கு எதிராக மட்டுமே தாங்கள் வாதிடுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இந்த பொதுநல மனுவில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் சட்டமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வரும் என்றும், தடை விதிக்கும் சட்டம் அல்லது தடை விதிக்கும் விதிகளை நீதிமன்றம் உருவாக்க முடியாது என்றும் நீதிபதிகள் அமர்வு கூறியது. மேலும், ஏதேனும் உரிமை மீறப்பட்டால் உயர்நீதிமன்றம் தலையிடலாம் என்று கூறியுள்ளனர். “இங்கே இரண்டு வழிகள் உள்ளன, ஒரு சாதாரண மனிதன் டிவியை அணைக்கச் சொல்வான். ஆனால், நாம் அதை சட்டத்தின் புள்ளியில் இருந்து பார்ப்போம். நீங்கள் கேட்பது சட்டத்தால் வழங்கப்பட வேண்டும்,. இங்கே அத்தகைய சட்டம் இல்லை. அதனால்தான், நீங்கள் சட்டத்தை உருவாக்கச் சொல்கிறீர்கள்” என்று நீதிபதிகள் அமர்வு கூறியது.

அசைவு உணவு விளம்பரங்களுக்கு தடை கோரி மற்றவர்களின் உரிமைகளை மனுதாரர் திறமையாக அபகரிப்பதாகவும் நீதிமன்றம் கூறியது. “அரசியலமைப்பின் பிரிவு 19 (தனிப்பட்ட சுதந்திரத்துடன் வாழ்வதற்கான உரிமை) மீறல் பற்றி என்ன? நீங்கள் ஏன் மற்றவர்களின் உரிமைகளை மீறுகிறீர்கள்? இந்த பிரச்னையைப் பார்க்க இரண்டு வழிகள் உள்ளன. ஒரு சாதாரண மனிதன் டிவியை அணைக்கச் சொல்வான். ஆனால், நாம் அதை சட்டத்தின் புள்ளியில் இருந்து பார்ப்போம். நீங்கள் கேட்பது சட்டத்தால் வழங்கப்பட வேண்டும். இங்கே அத்தகைய சட்டம் இல்லை. அதனால்தான், நீங்கள் சட்டத்தை உருவாக்கும்படி கேட்கிறீர்கள்” என்று நீதிமன்றம் மேலும் கூறியது.

இந்த பொதுநல மனுவுடன் வேறு சில தொடர்புடைய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்று கூறி மனுவைத் திருத்த மனுதாரர்கள் கோரியதைத் தொடர்ந்து, நீதிபதிகள் அமர்வு மனுவைத் திரும்பப் பெற அனுமதித்தது. புதிய மனுவைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர். மேலும், “மனு திரும்பப் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கூறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Mumbai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment