மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி , 2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
அனைவர் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், 2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில், அருண் ஜெட்லி சில இலவச சலுகைகளை அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கியமான இலவச அறிவிப்புகள்.
*8 கோடி கிராம பெண்களுக்கு இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டம்.
*4 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டம்.
*இலவச மருந்து மற்றும் இலவச உடல் பரிசோதனை திட்டம்.
*10 கோடி ஏழை குடும்பங்களின் சுகாதாரத்திற்காக தலா ரூ.5 லட்சம் ரூபாய் மருத்துவத்திட்டம்.
*எஸ். சி மற்றும் எஸ்.டி மக்கள் மேம்பாட்டிற்காக நிதியில் 50 சதவீத உயர்வு
*500 நகரங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் அம்ருத் திட்டம்
*சிறு, குறு தொழில்களின் வரிக் குறைப்பு
*சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் கடன் பெறும் வசதி.
*பழங்குடியினரை மேம்படுத்தும் 305 திட்டங்கள்
*பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி வீடுகள்.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்தக்யுள்ளதாக அருண் ஜெட்லி தெவித்துள்ளார். மேலும், 2018 -19 நிதியாண்டிற்கான பட்ஜெட் சாமனியர்களுக்கு பயன்பெறும் வகையில், அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Budget 2018 for poor people
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்