Advertisment

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வை 4 சதவீதம் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cabinet approves 4% hike in DA to 21%

Cabinet approves 4% hike in DA to 21%

பணவீக்கத்தால் செலவுகள் அதிகரிக்கும் போது அதனைக் கட்டுப்படுத்த அகவிலைப்படியை உயர்த்தி அளிக்கப்படுவதே அகவிலைப்படியாகும். பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படுகிறது.

Advertisment

அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 12 சதவீதத்திலிருந்து மேலும் 5 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

’பீதிக்கு நோ, முன்னெச்சரிக்கைக்கு யெஸ்’ : கொரொனா குறித்து பிரதமர் மோடி

தற்போதைய நடப்பு பருவத்துக்கு அகவிலைப்படியை எத்தனை சதவீதம் உயர்த்துவது என்பதுபற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வந்தது.

இந்நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வை 4 சதவீதம் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

48 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும், அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, இதனால், மொத்த அகவிலைப்படி 21 சதவீதமாக உயர்த்தப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்த உயர்வு காரணமாக அரசுக்கு ரூ .14,595 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் ஜவடேகர் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Prakash Javadekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment