scorecardresearch

பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்கிறது; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Cabinet clears push to raise marriage age of women from 18 to 21: பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெண்களின் திருமண வயது 18லிருந்து 21 ஆக உயர்கிறது; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தனது 2020 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது இந்த திட்டம் குறித்து அறிவித்த ஒரு வருடத்திற்கும் மேலாக, மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஆண்களைப் போலவே பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்தை நிறைவேற்றியது.

அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 இல் அரசாங்கம் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தும் என்றும், அதன் விளைவாக சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டம், 1955 போன்ற தனிநபர் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவரும் என்றும் வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன.

“தாய்மையின் வயது தொடர்பான விஷயங்கள், MMR (மகப்பேறு கால இறப்பு விகிதம்), ஊட்டச்சத்து மேம்பாட்டு நிலைகள் மற்றும் தொடர்புடைய சிக்கல்கள் போன்றவற்றை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஜெயா ஜெட்லி தலைமையிலான மத்திய அரசின் பணிக்குழு 2020 டிசம்பரில் நிதி ஆயோக்கிற்குச் சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புதன்கிழமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.”

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜெயா ஜேட்லி, “இந்தப் பரிந்துரையின் பின்னணியில் உள்ள எங்களின் காரணம் மக்கள்தொகைக் கட்டுப்பாடுடன் தொடர்புடையதாக இருந்ததில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். NFHS 5 (National Family Health Survey) ஆல் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவு, மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதையும் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இருப்பதையும் ஏற்கனவே காட்டியுள்ளது. எங்கள் பரிந்துரையின் பின்னணியில் உள்ள யோசனை பெண்களின் அதிகாரம் ஆகும்.

NFHS 5 இன் தரவுகளின்படி, இந்தியா முதன்முறையாக மொத்த கருவுறுதல் விகிதமான 2.0 ஐ எட்டியுள்ளது, இது TFR இன் மாற்று நிலை 2.1க்குக் கீழே உள்ளது. மேலும் இது வரும் ஆண்டுகளில் மக்கள்தொகை வெடிப்பு சாத்தியமில்லை என்பதைக் குறிக்கிறது. 2015-16ல் 27 சதவீதமாக இருந்த குழந்தைத் திருமணம் 2019-21ல் 23 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமதா கட்சியின் முன்னாள் தலைவரான ஜெயா ஜெட்லி, “நிபுணர்கள் மற்றும் முக்கியமாக இளம்வயதினர், குறிப்பாக இந்த முடிவு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் இளம் பெண்கள்” ஆகியோருடனான விரிவான ஆலோசனைக்குப் பிறகு, பணிக்குழுவின் இந்த பரிந்துரை வந்தது என்றார்.

“நாங்கள் 16 பல்கலைக்கழகங்களில் இருந்து கருத்துக்களைப் பெற்றுள்ளோம், மேலும் 15க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் விளிம்புநிலை சமூகங்களிடம் கருத்துக்களைக் கேட்க வைத்தோம், குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள குறிப்பிட்ட மாவட்டங்களில் குழந்தைத் திருமணம் மிகவும் அதிகமாக உள்ள பகுதிகளிலும் கருத்துக்கள் பெறப்பட்டன. இந்த கருத்துக்கள் மதங்கள் மற்றும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து சமமாக எடுக்கப்பட்டது,” என்று ஜெயா ஜெட்லி கூறினார்.

“இந்தியா முழுவதும், இளம்வயதினரிடமிருந்து நாங்கள் பெற்ற கருத்து என்னவென்றால், திருமண வயது 22-23 ஆக இருக்க வேண்டும். சில தரப்பிலிருந்து ஆட்சேபனைகள் உள்ளன, ஆனால் இது இலக்கு குழுவால் வழிநடத்தப்படுவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் உணர்ந்தோம்,” என்று ஜெயா ஜெட்லி கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஜூன் 2020 இல் அமைக்கப்பட்ட பணிக்குழுவில், நிதி ஆயோக்கின் டாக்டர் வி.கே.பால் மற்றும் WCD, சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சகங்கள் மற்றும் சட்டமன்றத் துறையின் செயலாளர்களும் அடங்குவர்.

இந்த முடிவை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க, ஒரு விரிவான பொது விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அணுகலைப் பொறுத்தவரையில், தொலைதூரப் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்கள் சேர்க்கை பெறும் வகையில் போக்குவரத்து உட்பட, பிற வசதிகள் செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி முறைப்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. பாலிடெக்னிக் நிறுவனங்களில் பெண்களுக்கு பயிற்சி அளித்தல், திறன் மற்றும் வணிக பயிற்சி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை திருமண வயதை அதிகரிப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்கள் என்று காட்டினால், பெற்றோர்கள் அவர்களுக்கு முன்கூட்டியே திருமணம் செய்வதற்கு முன் இருமுறை யோசிப்பார்கள்,” என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 5(iii) மணமகளுக்கு 18 வயதாகவும், மணமகனுக்கு 21 ஆகவும் நிர்ணயிக்கிறது. சிறப்புத் திருமணச் சட்டம், 1954 மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 ஆகியவையும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு முறையே 18 மற்றும் 21 ஆண்டுகள் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

2020-21 ஆம் ஆண்டிற்கான தனது பட்ஜெட் உரையின் போது பணிக்குழுவை அமைப்பது பற்றி குறிப்பிடுகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 1978 ஆம் ஆண்டு 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டத்தை திருத்தியதன் மூலம் பெண்களின் திருமண வயது 15 ஆண்டுகளில் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியா மேலும் முன்னேறும் போது, ​​பெண்கள் உயர்கல்வி மற்றும் தொழிலைத் தொடர வாய்ப்புகள் திறக்கப்படுகின்றன. MMR ஐக் குறைப்பது மற்றும் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவது அவசியம். தாய்மையில் நுழையும் ஒரு பெண்ணின் வயது குறித்த முழுப் பிரச்சினையும் இந்த வெளிச்சத்தில் பார்க்கப்பட வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Cabinet clears push to raise marriage age of women from 18 to 21

Best of Express