2 கட்டங்களாக நடக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு; அக்டோபர் 1-ல் தொடக்கம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், லடாக் மற்றும் பிற பகுதிகளின் மலைப்பகுதிகள், பனிப்பொழிவு உள்ள இடங்களில் 2026 அக்டோபர் 1 முதல் தொடங்கும்.

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், லடாக் மற்றும் பிற பகுதிகளின் மலைப்பகுதிகள், பனிப்பொழிவு உள்ள இடங்களில் 2026 அக்டோபர் 1 முதல் தொடங்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Census 2026

மத்திய அரசு இன்று (ஜூன் 4) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக, 2026 அக்டோபர் 1 முதல் தொடங்கி, மூன்று ஆண்டுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

 

 

Advertisment
Advertisements

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், லடாக் மற்றும் பிற பகுதிகளின் மலைப்பகுதிகள், பனிப்பொழிவு உள்ள இடங்களில் 2026 அக்டோபர் 1 முதல் தொடங்கும். நாட்டின் மற்ற பகுதிகளை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு 2027 மார்ச் 1 முதல் நடைபெறும்.

முன்னதாக, ஏப்ரல் 20 அன்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான கணக்கெடுப்பை சேர்க்க ஒப்புதல் அளித்திருந்தது. இந்த சாதிவாரியான கணக்கெடுப்பும் இந்த இரண்டு கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைந்து நடைபெறும் என்று மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 இன் பிரிவு 3-ன் படி, 2025 ஜூன் 16 அன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடைசியாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டம் - வீட்டுப் பட்டியல் (HLO) 2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்டம் - மக்கள் தொகை கணக்கெடுப்பு (PE) 2011 பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 28 வரை நடைபெற்றது. ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பனிப்பொழிவு உள்ள பகுதிகளுக்கு, இது 2010 செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 30 வரை நடைபெற்றது.

முன்னதாக எதிர்க்கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசுக்கு எதிராக சாதிவாரியான கணக்கெடுப்பு குறித்து அழுத்தம் கொடுத்து வந்தன. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான கணக்கெடுப்பை சேர்க்க முடிவு செய்துள்ளது. "இது ஒரு அரசாங்கம், சமூகத்தின் மற்றும் நாட்டின் மதிப்புகள், நலன்களுக்கு கடமைப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது" என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏப்ரல் 20 அன்று தெரிவித்திருந்தார்.

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய பட்ஜெட்டில் ரூ. 572 கோடியிலிருந்து ரூ 574.80 கோடியாக அதிகரித்துள்ளது.

Caste Census

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: