காவிரி பிரச்னை: பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கர்நாடக காவல்துறை போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கர்நாடக காவல்துறை போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
cauvery

காவிரி பிரச்னை: பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கர்நாடக காவல்துறை போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகத்துக்கு காவிரியில் 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டதையடுத்து, பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கர்நாடக போலீஸார் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கர்நாடகாவில் மழை பொழிவு குறைவாக உள்ள ஆண்டில் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, கன்னட ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் அமைப்பினர் வெள்ளிக்கிழமை கர்நாடகம் முழுவதும் பந்த் அழைப்பு விடுத்துள்ளனர். கர்நாடகா தலைநகர் பெங்களூருவிலும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி. தயானந்த், தலைநகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அந்த பகுதி காவல் துணை துணை ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். போலீசார் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்கும் வகையில், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளனர்.

Advertisment
Advertisements

பெங்களூருவில் 1991-ம் ஆண்டு தமிழர்களை குறிவைத்து மிக மோசமான வன்முறை ஒன்று நடந்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மைசூரு நகரில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. காவிரி நதிநீர் தீர்ப்பாயம் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி, போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழ் மக்கள் பீதியடைந்து ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திற்கு சென்றனர். இந்த மோதலின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. 

காவிரி விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை போராட்டங்கள் தொடர்ந்தாலும், கிருஷ்ணராஜ சாகர் அணை அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தில் செப்டம்பர் 23-ம் தேதி பெரிய அளவிலான முழு அடைப்பு நடத்த கன்னட அமைப்புகள், விவசாயிகள் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இந்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தமிழகத்தில் ஆளும் தி.மு.க-வுடன் காங்கிரஸ் அரசு கூட்டுச் சேர்ந்து செயல்படுவதாக பா.ஜ.க மற்றும் ஜே.டி.எஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல் துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: