Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் : மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme court hears Ayodhya verdict review petition today

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மேலும் 2 வாரம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருக்கிறது.

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை. காவிரி நடுவர் மன்றம் இதற்கான இறுதி உத்தரவை கடந்த 2007-ம் ஆண்டு பிறப்பித்தது. அதன்பிறகு உச்ச நீதிமன்றமும் இருமுறை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனாலும் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை.

காவிரி வழக்குகளில் இறுதி உத்தரவை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி பிறப்பித்த உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய நீரின் அளவில் மட்டும் மாற்றம் செய்தது. இதை அமல்படுத்த 6 வாரங்களில் ஸ்கீம் உருவாக்க கேட்டுக்கொண்டது. ஆனால் 6 வார முடிவில் மேலும் அவகாசம் கேட்ட மத்திய அரசு, ‘ஸ்கீம்’ என்பதற்கும் விளக்கம் கேட்டது.

ஆனால் ‘ஸ்கீம்’ பற்றி எதுவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வில்லை. மே 3-ம் தேதிக்குள் தெளிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று மத்திய அரசு சார்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘காவிரி செயல் திட்டம் உருவாக்க மேலும் 2 வாரம் அவகாசம் தேவை’ என கேட்கப்பட்டிருக்கிறது.

காவிரி வழக்கில் மேலும் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மே 12-ல் நடைபெற இருக்கும் கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு அவகாசம் கேட்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

 

Justice Dipak Misra Supreme Court Of India Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment