Advertisment

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - சி.பி.எஸ்.இ

தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சி.பி.எஸ்.இ சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE Board Exam Change experts opinion

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு, சி.பி.எஸ்.இ ஓர் முக்கிய அறிவுரையை வழங்கியிருக்கிறது.

Advertisment

இது குறித்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் எதையும் மாணவர்கள் நம்ப வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மெயின் தேர்வு தொடங்கும் முன்பே, இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு, சி.பி.எஸ்.இ கேள்வித் தாள்கள் சமூக ஊடகத்தில் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. 10-ம் வகுப்பு கணிதமும், 12-ம் வகுப்பின் பொருளாதார கேள்வித்தாளும் லீக்கானது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

”இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எச்சரிக்கப்படுகிறார்கள். ஒரு வேளை தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சி.பி.எஸ்.இ சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்” என பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மைய லொகேட்டர் ஆப், லைவ் வெப் ஸ்ட்ரீமிங், மானிட்டரிங் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்தாண்டு அதிகரித்திருக்கிறது சி.பி.எஸ்.சி நிர்வாகம்.

 

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment