தமிழகத்தின் குன்னூர் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத் புதன்கிழமை உயிரிழந்தார். படத்தில்: ஜனவரி 15, 2019 செவ்வாய் அன்று புது தில்லியில் ராணுவ தின அணிவகுப்பின் போது ஜெனரல் பிபின் ராவத் மரியாதை செலுத்துகிறார்
/tamil-ie/media/media_files/uploads/2021/12/Bipin-Rawat-5.jpg)
அரசாங்கத்தின் முதன்மை இராணுவ ஆலோசகர் பதவியை உருவாக்க டிசம்பர் 24 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஜனவரி 1, 2020 அன்று ஜெனரல் பிபின் ராவத் பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக (சிடிஎஸ்) பொறுப்பேற்றார். படத்தில்: ஜனவரி 15, 2019 செவ்வாய்க் கிழமை புது தில்லியில் ராணுவ தினத்தையொட்டி இந்தியா கேட்டில் ஜெனரல் பிபின் ராவத்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/Bipin-Rawat-6.jpg)
ஜெனரல் பிபின் ராவத் அவருக்கு மூத்த இரண்டு அதிகாரிகளுக்கு முன்னதாக 27வது ராணுவத் தளபதியாக டிசம்பர் 31, 2016 அன்று பதவியேற்றார். டிசம்பர் 31, 2019 வரையிலான அவரது பதவிக் காலத்தில், இராணுவத்தை மறுசீரமைக்கவும், எதிர்கால போர்களுக்கு ஏற்றதாக மாற்றவும் அவர் ஆய்வுகளைத் தொடங்கினார். படத்தில்: ஜெனரல் பிபின் ராவத் செலாவில் உள்ள கிழக்குக் கட்டளைப் பயிற்சிப் பணியிடங்களைப் பார்வையிடுகிறார். (ANI புகைப்படம்)
/tamil-ie/media/media_files/uploads/2021/12/bipin-2.jpg)
ஜெனரல் பிபின் ராவத் 1978 ஆம் ஆண்டு டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாடமியில் மரியாதைக்குரிய வாள் விருது பெற்ற பிறகு கோர்க்கா படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார். அவர் சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஒரு காலாட்படை பட்டாலியனுக்கும், காஷ்மீரில் ஒரு பிரிகேடியராக ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவிற்கும் தலைமை வகித்தார். பிபின் ராவத் காஷ்மீரில் ஒரு காலாட்படைப் பிரிவிற்கும், கிழக்குக் கட்டளையில் ஒரு கார்ப்ஸிற்கும் தலைமை பொறுப்பேற்றார், பிபின் ராவத் தெற்கு இராணுவத் தளபதியாகவும், இராணுவத் துணைத் தளபதியாகவும் பணியாற்றினார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/Bipin-Rawat-7.jpg)
ஜெனரல் ராவத், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விஷிஸ்ட் சேவா பதக்கம், யுஷ் சேவா பதக்கம், சேவா பதக்கம், விஎஸ்எம், இரண்டு முறை ராணுவ தலைமை தளபதி பாராட்டு மற்றும் ராணுவ தளபதியின் பாராட்டு உட்பட பல விருதுகளையும் மரியாதைகளையும் பெற்றார். படத்தில்: ஜூலை 8, 2018, ஞாயிற்றுக்கிழமை, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு ராவத் தனது மனைவி மதுலிகா ராவத்துடன் வருகை தந்தார். மதுலிகா ராவத்தும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/Bipin-Rawat-3.jpg)
நவம்பர் 12, 2018 திங்கட்கிழமை, பதன்கோட்டில் உள்ள மாமூன் ராணுவ நிலையத்தில் கடமையாற்றிய மாற்றுத்திறனாளி வீரர்களின் ஆண்டைக் குறிக்கும் வகையில், மாற்றுத்திறனாளி வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஜெனரல் பிபின் ராவத்.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/Bipin-Rawat-1-1.jpg)
"ஜெனரல் பிபின் ராவத்தின் நுண்ணறிவு, வியூக விஷயங்களில் முன்னோக்குகள் விதிவிலக்கானவை. அவரது மறைவு என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது" என்று அவரது மறைவுக்குப் பிறகு பிரதமர் மோடி இரங்கல் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil