இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒமிக்ரான் தொற்றால் இந்தியாவில் நிலவிய அசாதாரண சூழ்நிலை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மூன்றாம் அலையின் போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கவோ அல்லது தளர்வுகள் அளிக்கவோ மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ராஜேஷ் பூஷன் கடிதம்
இதுதொடர்பாக மாநில தலைமை செயலர்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடித்ததில் கூறியிருப்பதாவது, தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு சரிவை நோக்கி நகர்வதால், அந்தந்த மாநில அரசு புதிய பாதிப்பு, ஆக்டிவ் கேஸ்கள், பாதிப்பு விகிதம் ஆகியவற்றை கருத்தில் கூடுதள் தளர்வுகள் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முந்தைய மாதங்களில், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்கள் எல்லைகளிலும், விமான நிலையங்களிலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் அதே வேளையில், மாநில அளவில் விதிக்கப்பட்ட தடையால் மக்கள் நடமாட்டம் அல்லது பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதும் முக்கியமாகும் என தெரிவித்தார்.
இந்த கடிதம், கொரோனாவின் மூன்றாம் அலை முடிவுக்கு வந்ததை மத்திய அரசு ஒப்புக்கொண்டதாக பிரதிபலிக்கிறது. முந்தைய இரண்டு அலைகளை காட்டிலும் அதன் பரவல் வேகமாக இருந்தாலும், சுகாதார அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஒமிக்ரான் தொற்றின் அதிவேக பரவலால் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எண்ணிய நிலையில், எதிர்ப்பார்த்தை காட்டிலும் அதன் பாதிப்பு குறைவாக தான் இருந்தது.
இந்த கடிதமானது, நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு கீழ் சென்றதையடுத்து வந்துள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி தான், கொரோனா தொற்று உச்சத்தை அடைந்தது. அப்போது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.47 லட்சமாக இருந்தது. ஆனால், கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்திக்கிறது.
ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியுள்ளது. தற்போது, வாராந்திர பாசிட்டிவிட்டி விகிதம், 3.2 சதவீதமாக உள்ளது. ஆனால், ஜனவரி முதல் வாரத்தில் பாசிட்டிவிட்டி விகிதம் 17 சதவீதமாக இருந்தது.
நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் மட்டுமே தற்போது வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஆனால், ஜனவரி இறுதியில் மொத்தம் 400 மாவட்டங்களில் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் இருந்தது. ஏறக்குறைய 80 சதவீத மாவட்டங்களில் இப்போது பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது
இறப்பு எண்ணிக்கை அதிகம்
மூன்றாவது அலையின் தொடக்கத்துடன் ஒப்பிடும்போது இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக குறைய தொடங்கியுள்ளது.
கேரளா கொரோனா தொற்றால் உயிரிழந்த கணக்கிடப்படோதரின் விவரங்கள் புதுப்பித்து வருவதால், தினசரி இறப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
இதுவரை கேரளாவில் 62 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இது மகாராஷ்டிராவுக்கு அடுத்தப்படியாக அதிக இறப்பு பதிவான மாநிலமாகும். மகாராஷ்டிராவில் இறப்பு எண்ணிக்கை 1.47 லட்சமாக உள்ளது.
புதன்கிழமை, ஹரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (HSDMA) அதன் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகளையும் நீக்கியது.
கடந்த வாரம், இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை மையம் தளர்த்தியது. ஏழு நாள்கள் கட்டாய தனிமை இல்லை என தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil