Advertisment

கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு முயற்சி-பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடக்கம்

கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு எச்.பி.வி தடுப்பூசிகளை, 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு செலுத்த உள்ளது.

author-image
WebDesk
New Update
sasaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு எச்.பி.வி தடுப்பூசிகளை, 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு செலுத்த உள்ளது.

Advertisment

இந்தியாவில் இரண்டாவது அதிகமாக உள்ள புற்றுநோய்யாக இந்த கருப்பை வாய்ப் புற்று நோய் கருதப்படுகிறது. இந்நிலையில் இது ஏற்படாமல் தடுக்க 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் இரண்டாவது பாதியில் இது தொடங்குகிறது.

முதல் கட்டத்தை தொடங்க இந்திய அரசிடம் 6 முதல் 7 கோடி தடுப்பூசிகள் தேவையாக உள்ளது. இந்த தடுப்பூசி கருப்பை வாய்ப் புற்றுநோய்யை தடுப்பதோடு, தொண்டை, பெண் பிறப்புறுப்பு புற்றுநோய், ஆசனவாய் புற்றுநோய் ஆகியவற்றையும் ஏற்படாமல் தடுக்கும்.

இந்த தடுப்பூசியின் 2 டோஸ்கள் தற்போது விற்பனையில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி  ரூ.2000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு தடுப்பூசிகளை செலுத்தத் தொடங்கும்போது, இலவசமாக கிடைக்கும்.

இது தொடர்பாக அரசு அதிகாரி கூறுகையில் “9 முதல் 14 வயதை சேர்ந்த பெண் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி செலுத்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாநிலங்களில் உள்ள 9 வயது ஆகும் பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

9 முதல் 14 வயதுடைய 8 கோடி பெண் குழந்தைகள், இந்த தடுப்பூசி செலுத்தும் தகுதி உடையவர்களாகிறார்கள். இதை நாம் 3 ஆண்டுகளுக்கு பிரித்துக்கொள்ள வேண்டும். எல்லா வருடமும் 2.6 கோடி பெண் குழந்தைகள் இந்த தடுப்பூசி செலுத்திகொள்ள தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

2.6 கோடி பெண் குழந்தைகள் மட்டும் மில்லாது, 50 லட்சம் முதல் 1 கோடி பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக தடுப்பூசி தேவைப்படும். இவர்கள் 9- வயதை அடைவாரக்ள். ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்ட இடங்களில் இரண்டாம் மற்றும் 3ம் ஆண்டு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படும். இந்த தடுப்பூசி செலுத்தும் பணி பள்ளிகள் மற்றும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தும் மையங்களில் நடைபெற உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment