Advertisment

விடிய விடிய விசாரணை : சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் விஜயவாடாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

author-image
WebDesk
New Update
சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்

சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தில் ஆஜர்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் விஜயவாடாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Advertisment

 ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலிசார் நேற்று கைது செய்தனர்.

 இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபுவிடம் அதிகாலை 4 மணி வரை விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனை நடைபெற்ற பிறகு அதிகாரிகள் அவரை 6 மணியளவில் விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். முதல் கட்டமாக ரிமாண்ட் அறிக்கையை நீதிமன்றத்தில் வழங்கி உள்ளனர். சந்திரபாபு தரப்பில் வாதாட டெல்லியில் இருந்து வழக்கறிஞர் குழு வந்துள்ளது. அவர்களும் இது தொடர்பாக விவாதங்கள் தொடர உள்ளனர்.

 தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment