Advertisment

சிறையில் சந்திர பாபு நாயுடு, அரசியலில் தடம் பதித்த மனைவி: ஆந்திராவில் திடீர் திருப்பம்

சந்திரபாபு நாயுடு கைதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் இறந்த குடும்ப உறுப்பினர்களை என்.டி.ஆர்.ரின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான நார புவனேஸ்வரி சந்தித்துவருகிறார். இது மக்களிடையே தொடர்பை புதுப்பிக்க உதவும் என கட்சியினர் நம்புகின்றனர்.

author-image
WebDesk
Oct 26, 2023 23:51 IST
New Update
Chandrababu Naidu wife Bhuvaneshwari Truth yatra

சந்திர பாபு நாயுடு உடன் நாரா புவனேஸ்வரி

ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவருமான என்.டி.ராமராவின் மகளும், தற்போதைய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான நாரா புவனேஸ்வரி தற்போது மக்களை சந்தித்துவருகிறார்.

இவர் இதுவரை அரசியலில் இருந்து விலகி இருந்தார். குடும்பத்தின் ஹெரிடேஜ் உணவுகளின் நிர்வாக இயக்குநராக மட்டுமே தொடர்ந்தார்.

Advertisment

ஆனால் ஆந்திர திறன் மேம்பாட்டு கழக ஊழல் தொடர்பாக நாயுடு கைது செய்யப்பட்டிருப்பது புவனேஷ்வரியை தெலுங்கு தேசம் கட்சியின் போராட்டத்தின் மையத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், புதன்கிழமை (அக்.25) புவனேஷ்வரி திருப்பதியில் இருந்து தனது ‘நிஜம் கெளவலி (உண்மை வெல்ல வேண்டும்) யாத்திரையைத் தொடங்கினார்.

இதன் ஒரு பகுதியாக, நாயுடு கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் இறந்தவர்களின் குடும்பங்களை புவனேஸ்வரி சந்திக்கிறார்.

இதற்கிடையில், ஆந்திர பிரதேச தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் கே.அச்சன்நாயுடு இந்த யாத்திரை "பெரிய வெற்றியாக" முடியும் என்றும், "மக்களுடன் நல்ல தொடர்பை" உருவாக்க முடிந்தது என்றும் கூறினார்.

தெலுங்கு தேசம் கட்சியில் புவனேஷ்வரி ஒரு "மென்மையான" நபராகக் கருதப்படுகிறார், அவர் நாயுடுவுடன் அரசியல் நிகழ்வுகளில் அரிதாகவே தோன்றுவார்.

2021 நவம்பரில், ஆந்திர சட்டசபையில் நடந்த கடுமையான கருத்துப் பரிமாற்றத்தின் போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (ஒய்எஸ்ஆர்சிபி) தலைவர்கள் நாயுடுவின் குடும்பத்தைப் பற்றி தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டபோது அவரின் பெயர் செய்திகளில் அடிபட்டது.

இதற்கு எதிர்வினையாற்றிய சந்திர பாபு நாயுடு, “இந்த அசிங்கமான பேச்சுகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் போராட்டம் நடத்துவேன்” என்று கூறினார்.

இந்த நிலையில், செப்டம்பர் 15-ம் தேதி கைது செய்யப்பட்ட நாயுடுவுக்குப் பிறகு புவனேஸ்வரி பொது வெளியில் தோன்றி வருகிறார். ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் அவரைச் சந்தித்த பிறகு பலமுறை செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Chandrababu Naidu in jail, wife Bhuvaneshwari steps out from the shadows

அப்போது ஒருமுறை, “சிறையில் என் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. சிறையில் உள்ள மோசமான சூழ்நிலையால் ஏற்கனவே 5 கிலோ எடை குறைந்துள்ள அவர் மேலும் உடல் எடையை குறைந்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.

அவருக்கு தோல் தொற்று இருந்தது. அது சிறை அறையில் உள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக மோசமாகிவிட்டது" எனத் தெரிவித்திருந்தார்.

புவனேஸ்வரி சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். திங்கட்கிழமை, யாத்திரை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, அவர் தனது கணவர் சந்திரபாபு நாயுடு இல்லாமல் முதல் முறையாக திருமலை கோயிலுக்குச் சென்றதாக எழுதியிருந்தார்.

அதில், "நான் எனது குடும்ப உறுப்பினர்களுடன் இங்கு வருவேன்... இந்த பயணம் என்னை மிகவும் வருத்தப்படுத்தியது," எனத் தெரிவித்திருந்தார்.

யாத்திரை தொடங்கியபோது பெண் ஆதரவாளர்கள் உடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, “அன்பான சகோதரிகளே, இந்த சவாலான காலங்களில் உங்கள் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது வெறும் நீதிக்கான போராட்டம் அல்ல. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான போராட்டம்.

இது நமது எதிர்காலத்திற்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும், நம் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும், தலைமுறைக்காகவும் நடக்கும் போராட்டம்.

இந்த நோக்கத்திற்காக உங்கள் அர்ப்பணிப்புக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

இந்த முயற்சியில் நீங்கள் எங்களுடன் நிற்கிறீர்கள் என்பதை அறிந்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஒன்றாக, நாம் வெற்றி பெறுவோம், இறுதியில் நீதி வெல்லும். வாருங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment