Advertisment

சந்திராயன் 3 வெற்றி: விண்வெளித் துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் - மோடி பெருமிதம்

சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் விண்வெளித் துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறி பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandrayaan 3, Chandrayaan 3 Launch, Chandrayaan 3 Mission, ISRO Chandrayaan 3, ISRO, Chandrayaan 3 News, Launch of Chandrayaan 3, ISRO Chandrayaan 2 Launch, Chandrayaan 3 Moon Mission, சந்திராயன் 3 வெற்றி, விண்வெளித் துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம், பிரதமர் மோடி பெருமிதம், இஸ்ரோ, இந்தியா, ISRO Moon Mission 3, Chandrayaan 3 Launch Time, Chandrayaan 3 Launch Live, Chandrayaan 2 ISRO, Chandrayaan 2 Launch News, Chandrayaan 2 Launch Images, Chandrayaan 2 Launch Videos, How to Watch Chandrayaan 3 Launch, LVM, LVM 3

சந்திராயன் 3 வெற்றி: விண்வெளித் துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் - மோடி பெருமிதம்

சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் விண்வெளித் துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறி பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) பிற்பகல் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி செயற்கைக்கோள் செலுத்தும் நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

சந்திராயன் 3 விண்கலத்தை சுமந்து விண்ணில் சீறிப் பாய்ந்த LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. இதையடுத்து, 179 கி.மீ தொலைவில் சந்திராயன் விண்கலம் 3 புவி நீள் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.

சந்திராயான் 3 விண்கலம் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கை குலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சந்திராயன் -3 விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் “நிலவிற்கான பயணத்தை ‘சந்திரயான்-3’ மூலம் இந்தியா தொடங்கியுள்ளது. இந்தியவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். மேலும், சந்திரயான்-3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது: “விண்வெளி ஆய்வில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது; இதற்காக அயராது உழைத்த ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, விண்வெளி துறை வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயம் படைத்துள்ளது என்று வாழ்த்து கூறி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, “சந்திரயான்-3 விண்வெளியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது; ஒவ்வொரு இந்தியனின் கனவுகளும், லட்சியங்களும் உயரமாக பறக்கிறது; இந்த சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று; அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pm Modi Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment