மூடப்பட்ட சலால், பக்லிஹார் அணைகளின் மதகுகள்: வறண்டு போன செனாப் நதி

ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் உள்ள சலால் மற்றும் பக்லிஹார் நீர்மின் திட்ட அணைகளின் அனைத்து மதகுகளும் ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்டதை அடுத்து இது நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் உள்ள சலால் மற்றும் பக்லிஹார் நீர்மின் திட்ட அணைகளின் அனைத்து மதகுகளும் ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்டதை அடுத்து இது நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

author-image
WebDesk
New Update
Chenab river

ஜம்முவின் அக்னூர் பகுதியில் செனாப் நதியின் நீர்மட்டம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆச்சரியமடைந்த உள்ளூர் மக்கள் பலர், திங்களன்று ஆற்றுப்படுகையில் கூடினர்.

Advertisment

ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் உள்ள சலால் மற்றும் பக்லிஹார் நீர்மின் திட்ட அணைகளின் அனைத்து மதகுகளும் ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்டதை அடுத்து இது நிகழ்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Advertisment
Advertisements

 

இந்த சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை என்றாலும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் வண்டல் அகற்றும் பணியின் ஒரு பகுதியாக முன்பு காலி செய்யப்பட்ட இரு அணைகளின் நீர்த்தேக்கங்களிலும் தண்ணீரை சேமிப்பதற்காக மதகுகள் மூடப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது போல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான தனது ராஜதந்திர தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது - இதில் பக்லிஹார் அணை வழியாக நீர் பாய்ச்சுவதைக் கட்டுப்படுத்துவதும் அடங்கும்.

1960 முதல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளின் பயன்பாட்டை நிர்வகித்து வரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதாக மத்திய அரசு  அறிவித்திருந்தது.

பக்லிஹார் மற்றும் சலால் அணைகள், கீழ்நோக்கி நீர் வெளியிடும் நேரத்தை ஒழுங்குபடுத்த இந்தியாவை அனுமதிக்கின்றன. அவற்றின் கட்டுமானத்தின் போது, பாகிஸ்தான் ஆட்சேபனைகளை எழுப்பி உலக வங்கியின் தலையீட்டை நாடியது. பின்னர், அணையின் உயரத்தை முதலில் முன்மொழியப்பட்ட உயரத்திலிருந்து 1.5 மீட்டர் குறைத்து 143 மீட்டராக வைக்க இந்தியா ஒப்புக்கொண்டது. இதனால் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 13.5 சதவீதம் குறைக்கப்பட்டது.

நீண்ட காலத்திற்கு செனாப் நதி நீர் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தடுக்க அணைகளால் முடியாது என்றாலும், நீர் வெளியிடும் நேரத்தை ஒழுங்குபடுத்தும் திறனை அவை இந்தியாவுக்கு வழங்குகின்றன என்று வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நடைபெற்று வரும் அறுவடைக்கு அதிக தண்ணீர் தேவையில்லை என்றாலும், எல்லையின் இருபுறமும் உள்ள விவசாயிகளுக்கு நெல் சாகுபடி காலத்தில், ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் இது தொடங்கும் போது தண்ணீர் தேவைப்படும்.

"மதகுகளை மூடுவதன் மூலம், அடைப்பு குறுகிய காலத்திற்கு இருந்தாலும், நாங்கள் கட்டாய நடவடிக்கைகளை எடுப்போம் என்பதை நாங்கள் நிரூபிக்கிறோம்... செனாப் நதி நீர் பஞ்சாப் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்கிறது. மேலும், அனைத்து முனைகளிலும் நாங்கள் அவர்களைத் தண்டிப்போம் என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும்" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

திங்கள்கிழமை காலை, பக்லிஹார் அணையின் நீர்த்தேக்கம் நிரம்பத் தொடங்கியதும், அதிகாரிகள் அணையின் சில மதகுகளைத் திறந்தனர். பாகிஸ்தானை நோக்கி தண்ணீர் பாய்வதற்கு சலால் நீர்மின் திட்டத்தின் சில மதகுகளும் திறக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அங்கு கூடியதால், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் நாணயங்களைத் தேடியவர்களும் இருந்தனர். இதனால் ஜம்மு காஷ்மீர் போலீசார் செனாப் நதியைக் கால்நடையாகக் கடக்க வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அபாயத்தை உணர்ந்த போலீசார், மக்களை அப்புறப்படுத்த விரைந்தனர். பிற்பகல் நீர்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது. 

"நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்துள்ளது. திடீரென நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

"என் வாழ்நாளில் செனாப் நதி கிட்டத்தட்ட வறண்டு போயிருப்பதை நான் பார்த்ததில்லை" என்று அக்னூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் மோகன் சிங் ஜம்வால் கூறினார். 1992 செப்டம்பர் 10 அன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கரண் பாலத்தின் எச்சங்களை ஆற்றுப்படுகையில் காண முடிந்தது என்றும் அவர் கூறினார்.

1933-34 ஆம் ஆண்டில் ஜெர்மன் நிறுவனம் மூலம் டோக்ரா ஆட்சியாளர் மகாராஜா ஹரி சிங் கரண் பாலத்தை கட்டினார். பழைய பாலம் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பின்னர், அவரது மகன் டாக்டர் கரண் சிங்கின் பெயரால் அது அழைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

Jammu Kashmir

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: