Advertisment

பெகாசஸ்: ஓட்டுக் கேட்கப்பட்டதா? நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் - ப.சிதம்பரம்

தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் விசாரணையைவிட நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) நடத்தும் விசாரணை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சிதம்பரம் கூறினார்.

author-image
WebDesk
New Update
Chidambaram, PM Narendra Modi, snooping Pegasus row, பெகாசஸ் ஸ்பைவேர், நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும், பிரதமர் மோடி, ப சிதம்பரம், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை, ஜேபிசி, joint parliamentary committee, JPC, pm modi, bjp, Pegasus spyware

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பெகாசஸ் வேவு பார்த்த குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்க வேண்டும் அல்லது இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு பணியில் உள்ள நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றத்தில் கோர வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார். மேலும், கண்காணிக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், “2019 ஆம் ஆண்டின் முழு தேர்தல் ஆணையும் சட்டவிரோதமாக வேவுபார்க்கப்பட்டதாகக் கூறும் அளவிற்கு ஒருவர் செல்ல முடியும் என்று உறுதியாக தெரியவில்லை, ஆனால் அந்த வெற்றியைப் பெற பாஜகவுக்கு உதவி செய்திருக்கலாம். மேலும், அது குற்றச்சாட்டுகளால் கறைபட்டுள்ளது என்று கூறினார்.

ப.சிதம்பரம் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் விசாரணையை விட, நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி) விசாரணை நடத்துவதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், அதற்கு முந்தைய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்ப்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் “ஏற்கனவே எனது குழுவின் ஆணைப்படி உள்ளது” என்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என்றும் நாடாளுமன்ற ஐடி குழுத் தலைவர் சஷி தரூரின் கருத்துக்கள் குறித்து கேட்டதற்கு, பெரும்பான்மையான பாஜக உறுப்பினர்களைக் கொண்ட ஐடி குழு இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த அனுமதிக்குமா என்று சிதம்பரம் சந்தேகம் தெரிவித்தார்.

“நாடாளுமன்ற குழு விதிகள் மிகவும் கடுமையானவை. உதாரணமாக அவர்கள் வெளிப்படையாக ஆதாரங்களை எடுக்க முடியாது. ஆனால், பொது பார்வையில் சாட்சியங்களை எடுக்கவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும், ஆவணங்களை வரவழைக்கவும் ஒரு நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு நாடாளுமன்றத்தால் அதிகாரம் வழங்க முடியும். எனவே ஒரு நாடாளுமன்ற குழுவை விட ஒரு நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், இந்த விவகாரத்தை விசாரிக்கக்கூடிய அளவிற்கு நாடாளுமன்றக் குழுவின் பங்கைக் குறைக்கவில்லை என்றும் அவ்வாறு செய்வது வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரு சர்வதேச ஊடக கூட்டமைப்பு, இரண்டு அமைச்சர்கள், 40 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், 3 எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்தியாவில் ஏராளமான வணிகர்கள் மற்றும் செயற்பட்டாளர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டவர்களின் இந்திய மொபைல் தொலைபேசி எண்களை, இஸ்ரேலிய நிறுவனம் என்.எஸ்.ஓ.-வின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஹேக்கிங் செய்யப்பட்டிருக்கலாம் என்று செய்தி வெறியிட்டது.

இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் அரசாங்கம் மறுத்து வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கத்தின் பதில் குறித்து, ப.சிதம்பரம் கூறுகையில், ஐ.டி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். அவர் நிச்சயமாக மிகவும் புத்திசாலி அமைச்சர் என்றும் எனவே அந்த அறிக்கை மிகவும் புத்திசாலித்தனமாக சொல்லப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

“அவர் (வைஷ்ணவ்) எந்த அதிகாரப்பூர்வமற்ற கண்காணிப்பும் இல்லை என்று மறுக்கிறார். கண்காணிப்பு இருந்தது என்பதை அவர் மறுக்கவில்லை. அதிகாரப்பூர்வமான கண்காணிப்பு இருந்தது என்பதை அவர் மறுக்கவில்லை. அதிகாரப்பூர்வமான கண்காணிப்புக்கும் அதிகாரப்பூர்வமற்ற கண்காணிப்புக்கும் உள்ள வித்தியாசம் நிச்சயமாக அமைச்சருக்குத் தெரியும்” என்று காங்கிரஸ் தலைவர் கூறினார்.

மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம், கண்காணிப்பு ஏதேனும் இருந்ததா என்றும், பெகாசஸ் மூலம் ரகசியங்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.

“பெகாசஸ் ஸ்பைவேர் பயன்படுத்தப்பட்டால், அதை யார் வாங்கினார்கள்? இது அரசாங்கத்தால் அல்லது அதன் ஏஜென்சிகளால் வாங்கப்பட்டதா” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஸ்பைவேர் வாங்குவதற்கு செலுத்தப்பட்ட தொகையை முறையாக வெளிப்படையாக வர வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினரான ப.சிதம்பரம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

“இது எளிமையான நேரடியான கேள்விகள். இதை ஒரு சாமானிய குடிமகன் கேட்கிறான். அமைச்சர் அதற்கு நேரடியாக பதிலளிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரெஞ்சு அதிபர் (இம்மானுவேல்) மக்ரோனின் எண் ஹேக் செய்யப்பட்ட எண்களில் ஒன்று என்பது தெரியவந்தபோது பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டது. இஸ்ரேல் அதன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் விசாரணைக்கு உத்தரவிட்டது” என்று அவர் கூறினார்.

இரண்டு பெரிய நாடுகள் விசாரணைக்கு உத்தரவிட முடியும் என்றால், இந்தியா ஏன் விசாரணைக்கு உத்தரவிடக்கூடாது, இந்த 4 எளிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்கக்கூடாது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளையும் எழுப்புகிறது என்று சிதம்பரம் கூறினார். ஏனெனில், அரசாங்கம் கண்காணிக்க சொல்லவிலை என்றால் அப்போது யார் ரகசியமாக வேவு பார்ப்பதை நடத்தினார்கள் என்ற கேள்வி எழுகிறது.

“இந்தியாவில் அப்படி ஒரு அதிகாரம் மிக்க நிறுவனம் அரசாங்கத்திற்கு தெரியாமல் வேவு பார்த்ததா அல்லது அது அரசாங்கத்திற்கு தெரியாமல் இந்திய தொலைபேசிகளை ஹேக்கிங் செய்யும் வெளிநாட்டு நிறுவனமா? எந்த வழியிலும்… அரசாங்கம் கண்காணிப்பை நடத்துவதை விட இது மிகவும் தீவிரமான விஷயம்” என்றார்.

உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை குறித்தும், உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது குறித்தும் கேட்டதற்கு ப.சிதம்பரம் கூறுகையில், நீதிமன்றம் என்ன செய்யலாம் அல்லது செய்யக்கூடாது என்பது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார். ஆனால், ஏற்கனவே ஒன்று அல்லது இரண்டு நபர்கள் தனித்தனியாக தாக்கல் செய்த பொது நலன் வழக்கு, பெகாசஸ் விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

“அது எப்படியிருந்தாலும், அரசாங்கம் ஒரு நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தை கோர வேண்டும் அல்லது விசாரணையை நடத்துவதற்கு ஒரு கெளரவமான நீதிபதியை அமைக்க உச்சநீதிமன்றத்தை அரசாங்கம் கோர வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகள் உலக அரங்கில் இந்தியாவை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது குறித்து கேட்டதற்கு, ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் தனது வார்த்தைகளை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்துள்ளார். மேலும், அவர் கண்காணிப்பு இருப்பதை மறுக்கவில்லை என்றார்.

“பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டன என்பதை அவர் (ஷா) மறுக்கவில்லை. எனவே, உண்மையில், உள்துறை அமைச்சர் சொன்னதை விட, அவர் சொல்லாதது மிக முக்கியமானது” என்று ப.சிதம்பரம் கூறினார்.

இந்திய தொலைபேசிகள் ஸ்பைவேர் மூலம் ஊடுருவியுள்ளன என்பதை உள்துறை அமைச்சரால் திட்டவட்டமாக மறுக்க முடியாவிட்டால், வெளிப்படையாக அவர் தனது கண்காணிப்பில் நடக்கும் இந்த முறைகேடுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்ள லோக்ஜாம் மற்றும் பெகாசஸ் பிரச்சினையில் பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது குறித்து கேட்டதற்கு, குற்றச்சாட்டுகள் முன்னுக்கு வந்தபோது நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மோடி ஒரு அறிக்கையை அளித்திருக்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறினார்.

“இந்த கண்காணிப்பை செய்திருக்கக்கூடிய ஏஜென்சிகள் என்றால் ஒரு சில ஏஜென்சிகள் மட்டுமே உள்ளன. அனைத்து ஏஜென்சிகளும் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்று அவர் கூறினார்.

“ஒவ்வொரு அமைச்சருக்கும் தனது துறையின் கீழ் உள்ளவை மட்டுமே தெரியும். அனைத்து துறைகளின் கீழ் என்ன நடக்கிறது என்பது பிரதமருக்கு தெரியும். எனவே, பிரதமரே முன்வந்து கண்காணிப்பு இருந்ததா இல்லையா என்று கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு இருந்திருந்தால் அது அதிகாரப்பூர்வமானதா இல்லையா என்பதை அவர் கூறா வேண்டும்” என்று சிதம்பரம் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Pm Modi Pegasus Spyware Congress P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment