New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/ppc.jpg)
Tamil Nadu news today in tamil,
Chidambaram : தான் ஜெயிலுக்கு போவதை பற்றி கவலைப்படவில்லை என்றும் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறேன்
Tamil Nadu news today in tamil,
சிபிஐ நீதிமன்ற உத்தரவால் 14 நாட்கள் சிறை வாசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டுமே தான் கவலைப்படுவதாக கூறினார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் கடந்த 15 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ப சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என சிபிஐ தரப்பு குற்றம்சாட்டி காவல் நீட்டிப்பை நீட்டித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் 15 நாள்கள் காவலுக்கு பின்னர் இன்று (செப்டம்பர் 5ம் தேதி) ப சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப சிதம்பரம் தன்னை திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார். ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஒபி ஷைனி, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை டெல்லி திகார் சிறைக்கு போலீசார் அழைத்து செல்ல இருந்தனர். அப்போது ப சிதம்பரம் தான் ஜெயிலுக்கு போவதை பற்றி கவலைப்படவில்லை என்றும் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டும் தான் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.