Advertisment

நம் எந்த நிலத்தையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை- ஜெய்சங்கர்

சீனா தனது துருப்புக்களை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக மலைப்பகுதிகளின் மேல் பகுதிக்கு கொண்டு வர முயன்றது, ஆனால் இந்திய இராணுவமும் அதற்கு அதே வழியில் பதிலடி கொடுத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jaishankar

China has not occupied any of our land, situation sensitive: Jaishankar

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

"நம் எந்த நிலத்தையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை" என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை கூறினார்.

Advertisment

புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், இரு நாடுகளும் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஒருபோதும் துருப்புக்களை வைத்திருக்கவில்லை, இரு படைகளும் அதிலிருந்து விலகி தங்கள் பக்கங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில், சீனா சில இடங்களில் தனது படைகளை முன்னோக்கி கொண்டு வந்தது. பதிலுக்கு, நாங்களும் படைகளை முன்னெடுத்தோம், இதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. அதன் பிறகு, இரு படைகளும் மேலாதிக்கத்திற்காக தொடர்ந்து போரிடுகின்றனஆனால் எந்த அத்துமீறலும் இல்லை, என்று அவர் கூறினார்.

வியாழனன்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “சீனாவின் அத்துமீறலுக்கு​​அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

நம் எந்த நிலத்தையும் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று ஜெய்சங்கர் கூறினார்.

சீனா தனது துருப்புக்களை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக மலைப்பகுதிகளின் மேல் பகுதிக்கு கொண்டு வர முயன்றது, ஆனால் இந்திய ராணுவமும் அதற்கு அதே வழியில் பதிலடி கொடுத்தது. நிலைமை போட்டி மற்றும் சவாலாஉள்ளது.

மியான்மர் எல்லையில் வேலி அமைத்து பாதுகாப்பதை பற்றி பேசிய  அவர், மனித கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அங்கு நிலவிய சுதந்திர நடமாட்ட மண்டலத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதால் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக இது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், உண்மையில் நீங்கள் கட்சித் தலைமையிடம் இதுபோன்ற விஷயங்களைக் கேட்க வேண்டாம், உங்களுக்கு எது சிறந்தது என்பதை அவர்கள் தீர்மானிக்க அனுமதிக்கிறீர்கள். கட்சிக்காக தீவிர பிரசாரம் செய்து வருகிறேன். பெங்களூரில் நடந்ததைப் போல நான் எந்த நகரத்திற்கு அடிக்கடி சென்றாலும், அங்கிருந்து நான் போட்டியிடலாம் என்று கதைகள் பரவத் தொடங்குகின்றன, என்றார்.

இந்திய தேர்தல் சூழ்நிலையில் உலக நாடுகளின் ஆய்வு மற்றும் தொடர்ச்சியான கருத்துகள் குறித்து கேட்டதற்கு, இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை என்றும், இது சர்வதேச அளவில் மிகவும் தெளிவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொழில் தூதராக இருந்து அரசியல்வாதியாக மாறியது குறித்து, ​​"நாற்பது வருடங்கள் தொழில் தூதராக இருப்பதால், சபையில் கேள்வி நேரத்தின் 40 நிமிடங்களுக்கு கூட உங்களை தயார்படுத்த முடியாது, என்றார்.

Read in English: China has not occupied any of our land, situation sensitive: Jaishankar

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India China War
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment