Advertisment

இந்திய பகுதியை உள்ளடக்கி புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனா: மோடி மீது எதிர்க் கட்சிகள் தாக்கு

பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசியுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், சீனா மீது "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
China includes Arunachal Pradesh, Aksai Chin area in new map; Oppn hits out at Centre Tamil News

சீனா குறிப்பிட்டுள்ளது அபத்தமானவை என சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, ஜி20 உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பா.ஜ.க தலைமையிலான அரசு வரவேற்பு அளிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு நேற்று திங்கள்கிழமை சீனாவின் நிலையான வரைபடத்தின் 2023 பதிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் எல்லைக்குள் இருப்பதாகவும், தென்சீனக் கடல் மற்றும் தைவானும் அதன் எல்லைக்குள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Advertisment

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சில காலத்திற்கு முன்பு சீனா மாற்றிய நிலையில், அப்படி செய்வதால் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மாற்றிவிட முடியாது என்று இந்தியா தெளிவாகக் கூறியிருந்தது. இப்போது டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, சீனா தனது 'நிலையான வரைபடத்தின்' (சீனா புதிய வரைபடம்) 2023 பதிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த வரைபடத்தின் மூலம், இந்த பகுதிகளில் சீனா தனது உரிமைகோரல்களை வலுப்படுத்த விரும்புவதாக தெரிகிறது. அருணாச்சலப் பிரதேசம் தனது ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதில் ஒருபோதும் மாற்றமில்லை என்றும் இந்தியா பலமுறை கூறி வருகிறது. ஆனாலும், சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் 2023 ஆம் ஆண்டுக்கான சீனாவின் நிலையான வரைபடத்தை X தளத்தில் (முன்னதாக ட்விட்டர்) பகிர்ந்துள்ளது.

சீனாவின் கூற்றுக்கள் அபத்தமானவை என சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, ஜி20 உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பா.ஜ.க தலைமையிலான அரசு வரவேற்பு அளிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். “இன்று, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உண்மையான பிரச்சினை என்னவென்றால், சீனா பல புள்ளிகளில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக மீறியுள்ளனர்.

சீனர்கள் தற்போது 2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பா.ஜ.க அரசாங்கம் காலி செய்ய வேண்டிய பிரதேசம் இது. அந்தச் சூழ்நிலையில், ஜி20 ஒரு பன்னாட்டு மன்றமாக இருந்தாலும், டெல்லியில் 2,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருக்கும் ஜி ஜின்பிங் என்ற நபருக்கு விருந்து கொடுப்பது இந்தியாவின் சுயமரியாதைக்கு ஏற்புடையதா என்பதை அரசாங்கம் தீவிரமாக சுயபரிசோதனை செய்ய வேண்டும். எல்.ஏ.சி-யை ஒட்டிய இந்தியப் பகுதி.

இதைச் சுருக்கமாகச் சொல்வதானால், சீன வரைபடங்கள் அபத்தமானது, அவை சீன-இந்திய எல்லைப் பிரச்சினையின் வரலாற்றுடன் ஒத்திசைக்கவில்லை, அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை." என்று திவாரி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசியுள்ள சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், சீனா மீது "சர்ஜிக்கல் ஸ்டிரைக்" செய்யுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். “(பிரதமர்) சமீபத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குச் சென்று சீனப் பிரதமரைச் சந்தித்தார். தற்போது இந்த வரைபடம் வெளிவந்துள்ளது. எனவே, இந்த கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும். அது எப்படி தெரிகிறது? அது நம் இதயத்தை உடைக்கிறது. லடாக்கில் சீனா அத்துமீறி நுழைந்துள்ளது என்று ராகுல் காந்தி கூறியது உண்மைதான். நமது நிலத்தை சீனா தின்று விட்டது. அருணாச்சல பிரதேசத்திலும் நுழைய சீனா முயற்சிக்கிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்யுங்கள்” என்று ராவுத் செய்தியாளர்களிடம் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம்ஆப்பில் பெற https://t.me/ietamil

India China Arunachal Pradesh India China War
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment