Advertisment

லடாக் முழுவதும் சீனா படைகளை குவித்து வருகிறது – ராணுவ தளபதி நரவனே

China has deployed troops in considerable numbers across Ladakh: Army Chief M M Naravane: லடாக் முழுவதும் கணிசமான எண்ணிக்கையில் துருப்புக்களை நிறுத்தியுள்ள சீனா; கவலைக்குரிய விஷயமாக சுட்டிக்காட்டும் ராணுவத் தளபதி ஜெனரல் எம்எம் நரவனே

author-image
WebDesk
New Update
லடாக் முழுவதும் சீனா படைகளை குவித்து வருகிறது – ராணுவ தளபதி நரவனே

சீனா லடாக் முழுவதும் கணிசமான எண்ணிக்கையில் துருப்புக்களை நிறுத்தியுள்ளது, அது கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்று ராணுவத் தளபதி ஜெனரல் எம்எம் நரவனே சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisment

லடாக் போர் நிறுத்தம் மற்றும் இராணுவப் படைகளின் விலகல் குறித்து இரு நாடுகளுக்கிடையேயான 13 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அவரது அறிக்கை வந்தது.

"கிழக்கு லடாக் மற்றும் வடக்கு பகுதி முழுவதும் நமது கிழக்கு கட்டளை வரை கணிசமான எண்ணிக்கையில் சீனா படைகள் நிறுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக, முன்னோக்கியப் பகுதிகளில் அவர்களின் படைகள் வரிசைப்படுத்தல் அதிகரித்துள்ளது, இது எங்களுக்கு கவலையாக உள்ளது, ”என நரவனே தெரிவித்தாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"நாங்கள் அவர்களின் அனைத்து அசைவுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நாம் பெறும் உள்ளீடுகளின் அடிப்படையில், உள்கட்டமைப்பு மற்றும் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தேவையான துருப்புக்கள் ஆகியவற்றுடன் பொருந்தக்கூடிய முன்னேற்றங்களையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில், எந்தவொரு நிகழ்வையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். "

பிராந்தியத்தில் செயல்பாட்டு தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக நரவனே வெள்ளிக்கிழமை கிழக்கு லடாக் சென்றார். அங்கு ரெசாங் லா போர் நினைவிடத்திற்கு விஜயம் செய்தார், இது ரெசாங் லா மற்றும் ரெசின் லாவுக்கு அருகில் உள்ளது, இது பிப்ரவரியில் இந்திய மற்றும் சீனப் படைகள் விலகியிருந்த இரண்டு இடங்களாகும்.

இரண்டு படைகளும், தங்கள் படைகள் மற்றும் டாங்கிகளுடன், பிப்ரவரி வரை இந்த பகுதியில் சில நூறு மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போதிருந்து, இரு நாட்டு படைகளும் கோக்ரா போஸ்ட்டிலிருந்து விலகிவிட்டன, ஆனால் ஹாட் ஸ்பிரிங்ஸ் ஒரு பதற்றம் நிறைந்த பகுதியாக தொடர்கிறது.

ஹாட் ஸ்பிரிங்ஸைத் தவிர, வடக்கில் உள்ள வியூக முக்கியத்துவம் வாய்ந்த தௌலத் பேக் ஓல்டி தளத்திற்கு அருகில் உள்ள டெப்சாங் சமவெளியில் இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் பாரம்பரிய ரோந்துப் பகுதிகளை அணுகுவதை சீனப் படையினர் தடுத்து வருகின்றனர். டெம்சோக்கிலும், "பொதுமக்கள் என்ற போர்வையில்" சீன படையினர் LAC இன் இந்தியப் பக்கத்தில் கூடாரங்களை அமைத்தனர்.

செப்டம்பர் 16 அன்று, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், சீனாவின் மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யியை துஷன்பேவில் சந்தித்தார். வெளியுறவுத்துறை அமைச்சக தகவலின்படி, இரு தலைவர்களும் கிழக்கு லடாக் LAC இல் "தற்போதைய நிலைமை குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்". ஜெய்சங்கர் கோக்ரா போஸ்ட்டில் இருந்து விலகியதை குறிப்பிட்டார், "இருப்பினும் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய சில பிரச்சினைகள் நிலுவையில் உள்ளன".

இந்தியா சீனா இடையேயான கடைசி விவாதம், அதாவது 12 வது சுற்று, ஜூலை 31 அன்று நடந்தது, அப்போது இரு தரப்பினரும் கோக்ரா போஸ்ட் ஆஃப் ரோந்து புள்ளி 17A இலிருந்து விலக ஒப்புக்கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே எல்லை ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைச் சம்பவங்கள் தொடரும் என்று நரவனே முன்பு கூறியிருந்தார்.

"... நமக்கு ஒரு எல்லைப் பிரச்சினை உள்ளது. கடந்த காலங்களில் நாம் நிரூபித்ததைப் போல நிகழக்கூடிய எந்தவொரு அசம்பாவிதத்தையும் சந்திக்க நாம் மீண்டும் தயாராக இருக்கிறோம் ... நீண்ட கால தீர்வு எட்டப்படும் வரை இதுபோன்ற நிகழ்வுகள் தொடரும், அதாவது ஒரு எல்லை ஒப்பந்தம் வேண்டும். நம் முயற்சிகளின் உந்துதலாக அது இருக்க வேண்டும், இதனால் வடக்கு (சீனா) எல்லையில் நீடித்த அமைதி இருக்கும், ”என்று நரவனே கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India China Army Ladakh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment