Advertisment

மோடி தேர்தல் வெற்றிக்கு தைவான் வாழ்த்து; சீனா எதிர்ப்பு

மோடியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தைவான்; கூட்டாண்மையை எதிர்ப்பார்ப்பதாக பதிலளித்த மோடி; கருத்து பரிமாற்றத்திற்கு சீனா எதிர்ப்பு

author-image
WebDesk
New Update
modi

மோடியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தைவான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Shubhajit Roy

Advertisment

நரேந்திர மோடி, பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், தேர்தல் முடிவுகள் குறித்து தைவான் அதிபர் லாய் சிங்-தே மற்றும் மோடி இடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க:

கடந்த மாதம் தைவான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட லாய் சிங்-தே, புதன்கிழமையன்று தனது எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். வேகமாக வளர்ந்து வரும் #தைவான்-#இந்தியா கூட்டாண்மையை மேம்படுத்தவும், #இந்தோபசிபிக் அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் எங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்று பதிவிட்டார்.

அந்த செய்திக்கு பதிலளித்த மோடி, “லாய் சங்-தே உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி. பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை நோக்கி நாம் பணியாற்றும்போது நெருக்கமான உறவுகளை எதிர்பார்க்கிறேன்,” என்று பதிவிட்டார்.

வியாழன் அன்று ஒரு ஊடக சந்திப்பில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், மோடி மற்றும் லாய் சங்-தே இடையேயான கருத்து பரிமாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், "முதலில், தைவான் பிராந்தியத்தின் 'அதிபர்' என்று எதுவும் இல்லை," என்று கூறினார்.

“உங்கள் கேள்வியைப் பொறுத்தவரை, தைவான் அதிகாரிகளுக்கும் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் சீனா எதிர்க்கிறது. உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. தைவான் மக்கள் சீனக் குடியரசு பிரதேசத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்,” என்று மாவோ நிங் கூறினார்.

"ஒரே-சீனா கொள்கையானது சர்வதேச உறவுகளில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறை மற்றும் சர்வதேச சமூகத்தில் நிலவும் ஒருமித்த கருத்தாகும்," என்று கூறிய மாவோ நிங், "இந்தியா இதில் தீவிர அரசியல் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளது மற்றும் தைவான் அதிகாரிகளின் அரசியல் கணக்கீடுகளை அங்கீகரிக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் எதிர்க்க வேண்டும். இதற்கு இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது,” என்று கூறினார்.

இந்தியா சீனாவுடன் ராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது தைவான் அதிகாரிகள் மற்றும் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகளுக்கு இடையிலான அனைத்து வகையான அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் சீனா எதிர்க்கிறது. இந்த நிலைப்பாடு மிகத் தெளிவானது, இந்தியாவுக்கு இது நன்றாகத் தெரியும் என்று மாவோ நிங் கூறினார்.

இந்தியாவுக்கும் தைவானுக்கும் முறையான இராஜதந்திர உறவுகள் இல்லை, ஆனால் டெல்லி ஒரே சீனா கொள்கையை கடைபிடிக்கிறது. இரு தரப்பினரும் வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் கல்வியில் உறவுகளை மையமாக வைத்துள்ளனர். இப்போது மூன்றாவது தசாப்தத்தில் இருக்கும் உறவுகளின் விவரம், சீனாவின் உணர்திறன்களைக் கருத்தில் கொண்டு, வேண்டுமென்றே குறைவாக வைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Taiwan China India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment