/tamil-ie/media/media_files/uploads/2018/12/perumal-murugan-5.jpg)
ஹெலிகாப்டர் ஊழல்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், விசாரணையின் போது ”மிஸ்சஸ் காந்தி” மற்றும் ”தி சன் ஆஃப் இத்தாலியன் லேடி” என கூறியதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல்:
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மிகமுக்கிய வி.ஐ.பி.களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2010 ஆம் ஆண்டு முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக மிகப்பெரிய குற்றச்சாட்டு வெடித்தது.அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் எனக் குறிப்பிடப்படும் இந்த முறைகேட்டில் பிரிட்டிஷ் குடிமகனான கிறிஸ்டியன் மைக்கேல் இடைத்தரகராக செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். இதன்படி கிறிஸ்டியன் மைக்கேல், 5 நாட்கள் அமலாக்கத் துறையின் காவலுக்கு கடந்த வாரம் மாற்றப்பட்டார்.அவரின் காவல் இன்றுடன் (29.12.18) முடிவடைந்த நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள், கிறிஸ்டியனை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, அமலாக்கத் துறையினர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். கிறிஸ்டியனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர், “ திருமதி காந்தி" மற்றும் "அடுத்த பிரதமராகப் போகும் இத்தாலியப் பெண்ணின் மகன்" என கூறியதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இதுக்குறித்து முழு விசாரணையை கிறிஸ்டியன் மைக்கேலிடம் தொடர வேண்டும் என்றும் அவரது காவலை மேலும் 8 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.