பதவி விலக நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுப்பு: இறுதி அறிக்கையைப் பிரதமருக்கு அனுப்பிய தலைமை நீதிபதி

நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்துடன் நீதிபதிகள் குழு சமர்ப்பித்த அறிக்கையில் நகல் இணைத்திருக்கிறார்.

நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்துடன் நீதிபதிகள் குழு சமர்ப்பித்த அறிக்கையில் நகல் இணைத்திருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aa

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்க வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை

டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றிவந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, ஹோலி பண்டிகையை ஒட்டி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டில் கடந்த மார்ச் 14-ஆம் தேதியன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோடிக்கணக்கான பணம் தீயில் கருகியது.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியதில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்துக்கே அவரை பணியிட மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: CJI seeks Justice Varma’s resignation, he refuses

இதற்கிடையில், நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்தார். இந்த குழு, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கையை சமர்பித்தது. இதில் நீதிபதி மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதாக தெரிகின்றது.

Advertisment
Advertisements

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாக 3 பேர் கொண்ட குழு கண்டறிந்த பிறகு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நீதிபதி வர்மாவை ராஜினாமா செய்யக் கோரியதாக கூறப்படுகிறது. இருப்பினும், நீதிபதி வர்மா மறுத்துவிட்டார். குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி யஷ்வந்த் சர்மா பதவி விலகுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார். 

3 நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவின் அறிக்கையையும், நீதிபதி வர்மாவின் பதிலையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அனுப்பி வைத்துள்ளார். நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை தொடங்கும்படி அவர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்ததாகவும் தெரிகிறது. 

நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்து குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்துடன் நீதிபதிகள் குழு சமர்ப்பித்த அறிக்கையில் நகல் மற்றும் கடந்த 6ம் தேதி நீதிபதி யஷ்வந்த் சர்மாவிடம் இருந்து பெறப்பட்ட பதிலின் நகலையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இணைத்திருக்கிறார்.

வியாழக்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில், தலைமை நீதிபதி, "விசாரணை நடைமுறையின் அடிப்படையில், 03.05.2025 தேதியிட்ட 3-நபர் குழு அறிக்கையின் நகலையும், நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடமிருந்து பெறப்பட்ட 06.05.2025 தேதியிட்ட கடிதம்/பதிலையும் இணைத்து” குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் இருவருக்கும் கடிதம் எழுதியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, தலைமை நீதிபதி கண்ணா மே 4 ஆம் தேதி நீதிபதி வர்மாவுக்கு அறிக்கை நகலை பகிர்ந்து கடிதம் எழுதினார். நீதிபதி வர்மா தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை அறிக்கை முன்னுரையில் அவர் வழங்கியதாக அறியப்படுகிறது.

judge yashwant varma Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: