Advertisment

கோவை சிறுமி பலாத்கார கொலை வழக்கு : குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

Supreme court : கோவையில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்து கொன்ற குற்றவாளி மனோகரனுக்கு, உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coimbatore, girl , girl rape and murder, rape case, coimbatore rape case judgement

coimbatore, girl , girl rape and murder, rape case, coimbatore rape case judgement, கோவை, கோவை சிறுமி கொலை வழக்கு, கோவை சிறுமி பலாத்காரம், கோவை கொலை வழக்கு தீர்ப்பு, உச்சநீதிமன்றம், தூக்கு தண்டனை

கோவையில் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்து கொன்ற குற்றவாளி மனோகரனுக்கு, உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.

Advertisment

2010ம் ஆண்டில், கோவையை சேர்ந்த 10 வயது சிறுமி முஸ்கான் மற்றும் அவரது தம்பி 8 வயது சிறுவன் ரித்திக் ஆகியோர் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம், கோவை, தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.அவர்கள் உடல்கள் பொள்ளாச்சி அருகே மீட்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

போலீசார் துரித விசாரணை :இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், வாடகை கார் ஓட்டுநர் மோகன் ராஜ் என்பவரும், அவரது நண்பர் மனோகரனும் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது போலீஸ் காவலிலிருந்து மோகன்ராஜ் தப்பிக்க முயன்றார். எனவே போலீசார் என்கவுன்டரில் அவரை சுட்டுக் கொன்றனர். இதையறிந்த கோவை மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மனோகரனுக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம், இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்துக் கடந்த 2012, நவம்பர் 1ல் தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றத்தில், மனோகரன் மேல்முறையீடு செய்தார். அங்கேயும், மகளிர் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு : கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனோகரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஃபாலி நாரிமன், சஞ்சீவ் கன்னா, சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கன்னா தீவிரமாக வாதங்களை முன்வைத்தார், மனோகரன் தரப்பில் வழக்கறிஞர் பி.வினாய் குமார் ஆஜராகியிருந்தனர். விசாரணை முடிவில், மரண தண்டனையை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. சீராய்வு மனு தள்ளுபடி இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார் மனோகரன். இதை இன்று டிஸ்மிஸ் செய்துள்ளது உச்சநீதிமன்றம். எனவே மனோகரனுக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.

Coimbatore Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment