60 ஆண்டுக்குப் பிறகு குஜராத்தில் காங்கிரஸ் தேசிய மாநாடு: முக்கியத்துவம் பெறுமா?

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. 2 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. 2 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

author-image
WebDesk
New Update
AICC

60 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் காங்கிரஸ் தேசிய மாநாடு

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் 2 நாள் நடக்கும் இந்த மாநாட்டில் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் என நாடு முழுவதிலுமிருந்து நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

1995 முதல் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமர்வு குஜராத்தில் கடைசியாக 1961-ம் ஆண்டு பாவ்நகரில் நடைபெற்றது. அதன் பிறகு 60 ஆண்டுகள் கழித்து மீண்டும் குஜராத்தில் நடைபெற உள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்பட்ட நிலையில் கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டிய சூழலில் குஜராத்தில் நடக்கும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகாா் பேரவைத் தோ்தலில் பா.ஜ.க கூட்டணியை எதிா்கொள்வதற்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டில் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய முக்கிய மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. 

Advertisment
Advertisements

குஜராத்தைச் சோ்ந்த இருபெரும் தலைவா்களான மகாத்மா காந்தி காங்கிரஸின் தலைமையேற்று 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்தநாளையும் நினைவுகூரும் வகையில் நடப்பு ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாட்டை குஜராத்தில் அகமதாபாதில் அக்கட்சி நடத்துகிறது.

காந்தி மற்றும் சர்தாரின் மண்ணிலிருந்து பா.ஜ.க-வை எதிர்கொள்ள காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்பதே இதன் நோக்கம் எனக் கூறப்படுகிறது. இன்று சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடி ஆலோசனை செய்கிறது. அதைத் தொடர்ந்து நாளை சபர்மதி ஆசிரமத்திற்கும், கோச்ராப் ஆசிரமத்திற்கும் இடையே சபர்மதி நதிக்கரையில் நாடு முழுவதும் இருந்தும் மூத்த நிர்வாகிகள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி அமைக்க வசதியாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், வேட்பாளர் தேர்வில் மாவட்ட தலைவருக்கு அதிகாரம் வழங்குதல், தேர்தல் வெற்றி, தோல்விக்கு பொறுப்பேற்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட அமைப்பு ரீதியில் புத்துயிர் அளிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் இன்னும் வேலையைச் செய்யாததால், பாஜகவுடன் ஒப்பிடும் போது மக்களுக்கு மாற்றுசக்தி என்ன? என்பது குறித்து தெரியவில்லை என்று ஒரு தலைவர் கூறினார். "நாங்கள் எல்லாவற்றையும் எதிர்க்க முடியாது, நாம் ஏதாவது ஒன்றிற்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் அந்த ஏதாவது எதுஎன்று விளக்க வேண்டும், அது நம்பத்தகுந்ததாக இருக்க வேண்டும்," என்று கூறினார். அகமதாபாத் கூட்டத்தில் ஏதாவது ஒரு தொலைநோக்குப் பார்வை வகுக்கப்படும் என்பது நம்பிக்கை என்று அவர் மேலும் கூறினார். இல்லையெனில், அது அர்த்தமற்றது என்றார்.

பணவீக்கம் , வேலையின்மை, பொருளாதார நிலை, விவசாயிகளின் பிரச்னைகள், சமூக நீதி, வெளியுறவுக் கொள்கை, அரசியலமைப்பு மீதான தாக்குதல்கள் மற்றும் மதப் பிரிவுகள் மற்றும் தற்போதைய சவால்கள் மற்றும் தலைப்புகளை தீர்மானங்கள் கையாளும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 

Gujarat Congress

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: